யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Thursday, November 26, 2009

தட்டுகள் தடையோ !


வாழ்க்கையை வாழும் வகைகளை நாம் பின்பற்றும் வாழும் முறைகளே நிர்ணயிக்கின்றன ! மேல் தட்டு, இடைத் தட்டு மற்றும் கீழ் தட்டு மக்களின் வாழ்க்கை முறைகளில் மிக இலகுவாக இருக்கும் முறையாக நீங்கள் கருதுவது எது? ஏன்?உங்களின் கருத்துப் பரிமாற்றத்திலிருந்து முழுபதிவு தொடரும் !

-------------------------------------------------------------------------------------------------------------------------------

 வாழ்க்கை என்பது பெரும்பாலும் தெரிந்தெடுக்கப் பட்டதாகும். சில சமயம் திணிக்கப்பட்ட வாழ்கையாகவும் அது அமைவதுண்டு. எத்தகைய வாழ்க்கையானாலும், நாம் அதை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறோம் , எவ்வாறு அணுகுகிறோம் என்பதை பொறுத்தே, அதற்குண்டான,பலன் அமையப் பெறுகிறது. எவ்வித சூழலில் நாம் பிறக்கிறோம், எவ்வாறு வளர்கிறோம் என்பதே நாம் வாழும் முறைகளை தீர்மானிக்கின்றது. மேல் தட்டு, இடை தட்டு, கடை தட்டு ஆகிய மூன்று பிரிவுகளாகளைத் தான் நம் வாழ்க்கை உள்ளடக்கியதாக உள்ளது.


மேல் தட்டு மக்களின் வாழ்க்கை முறை அவர்களது செளகரியத்தை சார்ந்ததாகவும், கடைத் தட்டு மக்களின் வாழ்க்கை முறை, கிடைத்ததை வைத்து வாழ்வை ஓட்டும் விதத்தை சார்ந்ததாகவும் , இடைத் தட்டு மக்களின் வாழ்க்கை முறை, மேற்கூறிய இரண்டும் இல்லமால், ஆற்றில் ஒரு கால் , சேற்றில் ஒரு கால் என்ற அளவில் அமைகிறது.

 இதற்கு முக்கிய காரணிகளாக நிர்ணயிக்கப்படுவது எது? வாழ்க்கை பற்றிய நம் எண்ணங்களும் , அதை நாம் பார்க்கும் கோணங்களுமே !

கோடு போட்டு வாழும் வாழ்க்கை ! - இவை இப்படித்தான் பின்பற்றப்பட வேண்டும், இத்தகைய வாழ்வு முறைகளைத் தான் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியான கோட்பாடுகளை இடைத் தட்டு மக்கள் பின்பற்றுவதாலேயே, அவர்கள் மேற்கொள்ளும் வாழ்வு முறை, கடினமாகவும், அக்கடினத்தை சாமாளித்து, வாழ்வை கையாளும் விதமும் அவர்களுக்கு இலகுவாகிறது !

 போகும் போக்கில் வாழ்வை அணுகும் முறை, எளிதானதாகவே அமைந்து விடுகிறது. இத்தகைய வாழ்க்கை முறையையே கடை மற்றும் மேல் தட்டு மக்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்க உட்படுகிறார்கள்.

நினைக்கும் வாழ்க்கையை வாழ போதிய பொருள் ஆதாரம் இல்லை என்பதாலும், அன்றைய பொழுதை வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தினாலும், வரையறைக்குட்பட்ட வாழ்க்கை முறை அவர்கள் கண்களுக்கு புலப்படாமலே போய் விடுகிறது.

எல்லாம் போதிய அளவிற்க்கு மேல் இருப்பதாலேயோ என்னவோ, மேல் தட்டு மக்களும், இந்த நொடி எனக்குப் பிடித்ததாக அமைந்திருக்கிறதா இல்லையா, என்பதில் ஈடுபாடு காட்ட விழைகிறார்கள்.

எதுவும் இல்லை, ஆதாலால் எது கிடைக்கிறதோ அதை சுற்றியே வாழ்க்கை - இலகு - கடைத் தட்டு வாழ்க்கை முறை !

எல்லாமே அளவுக்கு மிஞ்சி இருக்கிறது, என் வாழ்க்கை என் விருப்பம் - மிகவும் இலகு- மேல்தட்டு வாழ்க்கை முறை !

இருக்கிறது - ஆனால் இல்லை, தோற்றப் பிழை போல் வாழ்க்கை - கடினம் - ஆனாலும் வாழ்வோம் -  இடைதட்டு வாழ்க்கை முறை !

Saturday, October 10, 2009

அடக்கத்தில் எல்லாம் அடக்கமா..


எட்டு மாதங்கள் - இடைவெளி------ எண்ணம் சார்ந்த என் எழுத்துக்களுக்கு ! எதனால் என்று ஆராய்வது அத்துணை சுவாரசியமாக இருக்காது என்பதால்,ஏன் பதிவு புதுப்பிக்கபடவில்லை என்று கேள்விக் கணைகள் எழுப்பிய இதயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும், காலதாமதத்திற்கு மன்னிப்பையும் கோரி இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

அடக்கம் அமரருள் உய்க்கும் - அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

என்ற வள்ளுவனின் கூற்று, அடக்கமாக இருப்பது ஒரு மேம்பட்டத் தன்மை என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது.

பொதுவாகவே, அடங்கிப் போகிறவர்களையும், அடக்கமாக இருப்பதற்க்கு முக்கியத்துவம் தருபவர்களையும் நமக்குப் பிடிக்கிறது. ஏன்? இதன் காரணத்தை ஆராய்ந்திருக்கிறோமா ! எதனால் இந்த எண்ணப் போக்கு? எதை எதிர்பார்த்து இப்படி ஒரு எண்ணம் நம் மனதிலும், நம்மாலும், மற்றவராலும் நமக்குள் திணித்து வளர்த்த்ப்படுகிறது? பணிவை நாம் மிகவும் ஆதரிக்கிறோமே ஏன்? பணிதலுக்குப் பின்னால் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்....அத்தகைய பணிதல் நமக்குள் விளைவிக்கும் விளைவுகள் எவை..ஒரு அலசலாக இப்பதிவை வைத்துக் கொள்வோமா..உங்கள் கருத்துக்களை முன் வைத்து மேலும் இதை விரிவாக விவாதிக்கலாம் என்ற எண்ணத்துடன், உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் :)
-------------------------------------------------------------------------------------------------

பணிவு பற்றி எல்லோருக்குமே ஒரே கருத்து தீர்க்கமாக இருப்பதை காண முடிகிறது ! பணிவை நாம் மனமுவந்து ஆதரிக்கிறோம் ! மிகச்சிறந்த உணர்வாகவும், தன்மையாகவும், பணிவு நம்மால் கொண்டாடப்படுவதற்க்கு பல காரணங்கள், ஒன்று : பணியர் பெரியர் !, இரண்டு : பணிதல், தலை கனம் இல்லாத் தன்மையை குறிக்கும் அறிகுறி ! மூன்று : கற்றலுக்கு வித்து, காது கொடுத்து மட்டுமல்லாமல்,பிற விஷயங்களை உற்று கவனித்து உள் வாங்கிக் கொள்ளப் பயன்படும் தன்மை ! நான்கு: சபை நாகரீகம் - பிறரை மதித்தலை காட்டிக் கொள்ள பயன்படும் கருவி !

ஆக பணிதல் மிக அவசியமான, ஒவ்வொருவரும் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டிய தன்மையில் ஒன்று தான்.. மறுக்கவில்லை ! ஆனால் பணிவை நாம் கற்றுக் கொள்ளல் எப்போது மிகுந்த நன்மை பயக்கும்??.. என்பது ஆராயப்பட வேண்டிய விஷயமாகத் தோன்றுகிறது. அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என்ற கூற்றுக்களை எப்பருவத்திலும் புரிந்து ஏற்று அதன் வழி நடக்க முயல்வது, நன்மைகள் பயக்கும் சாத்தியக் கூறுகளை வெளிக் காட்டுவதைப் போல், பணிவு வளர் ! என்ற கூற்றினை,ஒரு தீர்க்கமான தெளிவை நாம் அடைந்த பின்னரே, செயல் படுத்தல் வேண்டும் என்பதே என் கருத்து. சிறுவயதில் பணிவு என்பது, கீழ்படிதல் என்ற தன்மையை வளர்க்கப் பயன்படும் ஒரு கருவி, அக்கால கட்டத்தில் தான், கற்றலின் சுவை விதைக்கப்படுகிறது. சொல்வதை ஏற்றுக் கொள் என்று அறிவுறுத்தும் விதத்தில், அப்பிராயத்தில் கற்கும் எல்லா விஷயங்களுமெ பசுமரத்தாணி போல் பதியும் என்ற உறுதியால் கீழ்படிதல் கருவியாக்கப்பட்டது.

சிறுபிராயம் அடுத்து வளர் இளம் பருவத்தில், பணிவு பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அதை ஏற்று நடக்க முட்படுவது, ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும், தன் கருத்தையோ அல்லது செயலையோ தைரியமாக எவ்வித சூழலிலும் வெளிக்காட்ட தயங்கும் எண்ணத்தை விதைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். வளர் இளம் பருவம் மட்டுமல்லாது, இளம் பருவத்தை எய்திய பின்பும், வாழ்வு பற்றிய தனக்கு உண்டான ஒரு கோணமும், அதனைச் சார்ந்த தெளிவையும் ஒருவன் அடையாமல், பணிவை அதன் கூற்றுக்காக கடைபிடிப்பவர் அனைவருக்குமே மேல் கூறிய பக்க விளைவுகள் நேரிடக் கூறும்.

கற்றல் முடிவுறுவதில்லை ! - உண்மை. வாழ்நாள் முழுதும் கற்றலில் தான் பயணிக்கிறோம். ஆனால் வாழ்க்கையின் அடிப்படை சாராம்சத்தை புரிந்து, தெளிவான் கண்ணோட்டதுடன், வாழ்வை அணுகும் போது தான், தனக்கு ஒரு நிலையான எண்ணப்பாட்டை ஒருவன் வகுத்துக் கொள்ள இயலும். அத்தகைய நிலையில் தான் பணிவின் பயன்பாடு, அவனை மேன்மைப் படுத்தும்.

Monday, February 2, 2009

வளரும் விஞ்(ஞானி) !

போகத்தில் யோகம் - ஓர் அலசல்


மனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கொண்டவள் கைப்பிடித்து, மனதில் இடம் பிடித்து, முலைகள் முகம் பதித்து மடியில் தான் கிடந்தது மனையறம் தான் படந்து வாழ்வோன் போகி.... அதுவும் ஒரு வகையில் யோகமே..... பக்திக்கு இடமிருந்தால் முக்திக்கு வழியுண்டு...... யார் மேல் பக்தி? அடுத்தவனையும் நானாக, எனக்குள் ஓர் அங்கமென பாவனை செய்து சம பாவம் கொண்டு பரிபக்குவம் அடைதல் ஒரு வகை..... அது பாவச்பந்தனம் எனப்படும்...... அதனினும் மேலாம் நிலை ஒன்றுண்டு..... அவனுக்கு/அவளுக்கு உள்ளே இறைவன்.... நான் நீசன்..... அவனுக்கு - இறைவனுக்கு தொண்டு செய்கிறதாய் பாவித்து பிறர்க்கு தொண்டு செய்தல் இவ்வகை..... இது "நைச்சியம்" எனப்படும்.......... முந்தையதில் அகந்தைக்கு இடம் உண்டு..... வரலாம்..... வாய்ப்புண்டு..... பிந்தையதில் அகந்தை என்ற பேச்சே கிடையாது...... மனைவி அணைப்பில் மாயவனை பார்த்தால் என்ன? அங்ஙனம் ஒரு இல்லறத்தான் நினைப்பானேனில், அவனுக்கு கோயில் குளம் தேவையில்லை....... அத்தகைய மேலாம் இல்லறம் முக்திக்கு முதல் படி....... தன் சுகத்துக்காக தன் துணையை பயன்படுத்திக்கொள்ளும் உடல் அனுபவ வெறி இருந்தால் இது நடக்காது..... மனைவியை இவனும், கொண்டவனை அவளும் பக்தியோடு அணைந்தால்? அது பூரண ஒப்புதல்..... ஒப்படைத்தல்..... பரிபூரண நம்பிக்கையும் காதலும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் சங்கம சங்கீதம்..... ஆத்மாவின் ஆனந்த ராகம்...... அதற்கு சரீரம் தாளம் மட்டும் போடும் அனுபவ கச்சேரி..... உள்ளக்குடம் உடைந்த கணம் உணர்வுகள் ஊற்றெடுக்க, அன்பு ஆறாக, நீ - நான் வேற்றுமை நீறாக, பாசம் பிரவகிக்க, அண்மைக்கு அர்த்தமின்றி, அனுபவிப்பவனுமில்லை, அனுபவிக்கப்படுபவளும் இல்லையென்றாகி அனுபவமே மிஞ்சும் நிலை.......
முக்தி என்றால் என்ன? இறைவனும் பக்தனும் இரண்டேன்ற நிலை பொய், ஒரே இறை நிலை தானே முக்தி? முக்திக்கு முதல் படி இங்கே ஆரம்பம்..... துணைக்குள் தேவனை கண்டால், துணையின்றியும் அடையலாம்..... இதிலே இயலாமை- இறைவனை காட்டாது...... உடலெடுத்து வந்த போதே உடனிருந்தும் உணராதவன், உருவமிலாப்பெருநிலையை ஒருநாளும் உணரான்..... இறைவனின் உருவம் இதோ உன்னுடன்..... கோயில் கற்சிலை முன் கும்பிட்டு நின்றவனே! கொண்ட பொற்சிலை பரமாத்மா வாழுமிடம்..... போகமும் யோகமும் ஒருசேர உனக்களித்து இகத்துக்கும் பரத்துக்கும் பெருந்துணையாய் வந்தது - நீ கல்லில் தேடும் இறைவன்........ போகியே, விழித்தெழு..... இன்றிரவே உன் யோக சாதனம் தொடங்கட்டும்..... மனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கவலை கொள்ளாதே...... நீயும் யோகி தான்...... நீ விரும்பினால்...... இன்னும் எதற்காக காத்திருக்கிறாய்? மானிட வர்க்கத்தை வளர்த்து விடு...... நீயும் முக்தி அடை...... :)

பதிவர் : புவனேஷ்வர்

Saturday, January 17, 2009

Look At Things As They Can Be

Your range of available choices right now has no limits. The only limits you have are in your mind.

You've got it in you to succeed. Just make up your mind and stick with it.

You weren't born with any limits on your powers or any set limits to your capacity.

At any moment, you have more possibilities than you can act upon.

Imagine your possibilities and your vision expands.

Capture your dreams in your mind and your life becomes full.

Reach out and touch the limits of your being in your mind.

You can, because you think you can.


--Unknown...

====================================================================

சமீபத்தில், நான் மிகவும் ரசித்தது.....வாழ்க்கையை சுலபமாக்கிக் கொள்ளும் உத்தி ! :)

Friday, December 19, 2008

Love is always a river, flowing, unending. !!!

Love relates, but it is not a relationship.
A relationship is something finished.
A relationship is a noun;
the full stop has come, the honeymoon is over.
Now there is no joy, no enthusiasm, now all is finished.
You can carry it on, just to keep your promises.
You can carry it on because it is comfortable, convenient, cozy.

You can carry it on because there is nothing else to do.
You can carry it on because if you disrupt it,
it is going to create much trouble for you.

Relationship means something complete, finished, closed.

Love is never a relationship; love is relating.
It is always a river, flowing, unending.
Love knows no full stop;
the honeymoon begins but never ends.
It is not like a novel that starts at a certain point
and ends at a certain point.
It is an ongoing phenomenon.
Lovers end, love continues. It is a continuum.
It is a verb, not a noun.
And why do we reduce the beauty of relating to relationship?
Why are we in such a hurry? — because to relate is insecure,
and relationship is a security, relationship has a certainty.

Relating is just a meeting of two strangers, maybe just an overnight
stay and in the morning we say goodbye. Who knows what is going to
happen tomorrow? And we are so afraid that we want to make it certain,
we want to make it predictable. We would like tomorrow to be according
to our ideas; we don’t allow it freedom to have its
own say.

So we immediately reduce every verb to a noun.

You are in love with a woman or a man and immediately you start thinking
of getting married. Make it a legal contract. Why? How does the law come
into love? The law comes into love because love is not there. It is only
a fantasy, and you know the fantasy will disappear. Before it disappears
settle down, before it disappears do something so it becomes impossible
to separate.

In a better world, with more meditative people, with a little more
enlightenment spread over the earth, people will love, love immensely,
but their love will remain a relating, not a relationship. And I am
not saying that their love will be only momentary. There is every
possibility their love may go deeper than your love, may have a higher
uality of intimacy, may have something more of poetry and more of God
in it. And there is every possibility their love may last longer than
your so-called relationship ever lasts. But it will not be guaranteed
by the law, by the court, by the policeman.

The guarantee will be inner. It will be a commitment from the heart, it
will be a silent communion. If you enjoy being with somebody, you would
like to enjoy it more and more. If you enjoy the intimacy, you would like
to explore the intimacy more and more. And there are a few flowers of
love which bloom only after long intimacies. There are seasonal flowers
too; within six weeks they are there in the sun, but within six weeks
again they are gone forever. There are flowers which take years to come,
and there are flowers which take many years to come. The longer
it takes, the deeper it goes.

But it has to be a commitment from one heart to another heart. It has
not even to be verbalized, because to verbalize it is to profane it. It
has to be a silent commitment; eye to eye, heart to heart, being to being.
It has to be understood, not said.

It is so ugly seeing people going to the church or the court to get married.
It is so ugly, so inhuman. It simply shows they can’t trust themselves,
they trust the policeman more than they trust their own inner voice.
It shows they can’t trust their love, they trust the law.

Forget relationships and learn how to relate.

Once you are in a relationship you start taking each other for granted.
That’s what destroys all love affairs. The woman thinks she knows the man,
the man thinks he knows the woman. Nobody knows either. It is impossible
to know the other, the other remains a mystery. And to take the other
for granted is insulting, disrespectful.

To think that you know your wife is very very ungrateful.
How can you know the woman?
How can you know the man?
They are processes, they are not things. The woman that you knew
yesterday is not there today. So much water has gone down the Ganges;
she is somebody else, totally different. Relate again,start again,
don’t take it for granted.

And the man that you slept with last night, look at his face again
in the morning. He is no more the same person, so much has changed.
So much, incalculably much, has changed. That is the difference between
a thing and a person. The furniture in the room is the same, but the
man and the woman, they are no more the same. Explore again,
start again.

That’s what I mean by relating.

Relating means you are always starting,

you are continuously trying to become acquainted.
Again and again, you are introducing yourself to each other.
You are trying to see the many facets of the other’s personality.
You are trying to penetrate deeper and deeper into his realm of
inner feelings, into the deep recesses of his being.

You are trying to unravel a mystery which cannot be unraveled.
That is the joy of love: the exploration of consciousness. And if
you relate, and don’t reduce it to a relationship, then the other
will become a mirror to you. Exploring him, unawares you will be
exploring yourself too. Getting deeper into the other, knowing his
feelings, his thoughts, his deeper stirrings, you will be knowing
your own deeper stirrings too.

Lovers become mirrors to each other, and then
love becomes a meditation.

Relationship is ugly, relating is beautiful.

=====================================================================================

சமீபத்தில், நான் மிகவும் ரசித்தது.....பகிர்தல் ஒரு வித சந்தோஷம்..

நீங்கள் இதைப் பற்றி சொல்ல ஏதாவது இருக்கிறதா...

Sunday, August 10, 2008

கற்பு கருப்பானதா !!


நீண்ட நாட்களுக்குப் பின் இப்பதிவின் மூலம் உஙளை சந்திப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். புதிய விவாதமாக நான் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பில் உங்களது கருத்துக்களை வரவேற்கிறேன். கருத்துப் பரிமாற்றத்திற்குப் பிறகு, பதிவு தொடரும்.

கற்பு நெறி என்றால் என்ன? எதை வைத்து அது அனுமானிக்கப் படுகிறது? அதன் நன்மை தீமைகள் என்ன? ஏன் தேவைப் படுகிறது.ஒரு சாரரால் ஏன் தேவையிலை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது? கருத்துப் பகிர்தலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். :)
====================================================================
எதிர்பார்த்து,பின் இந்த எதிர்பார்பினால், எவ்வித பிரயோஜனமும் இல்லை என்று நினைத்து,அதனை கைவிட்ட வாசர்கர்களே, உங்களது, எதிர்பார்ப்பினை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யமுடியாமல் போனதிற்க்கு வருத்தம் தெரிவித்தல் என்பது, சாதாரணமாக நான் நினைத்ததை சொல்லி விடக்கூடும்.ஆகையால், பெரிய மனதுடன், மன்னிக்கும் மனது, உங்களிடம் இருப்பதாக எண்ணி, இச்சிறியேனை மன்னியுங்கள் !
====================================================================

கற்பு என்றால் என்ன?

- கற்பு என்பது தகுதி பிறழ்வாதது..தன்னிலையிலிருந்து பிரண்டு போகாமல் இருப்பது.

கற்பு நெறி என்றால் என்ன்?

- தன் தகுதியிலிருந்து பிறழ்ந்து போகமால் இருப்பதை , சமுதாய நோக்கிலிருந்து நெறிப் படுத்துவது.

கற்பு என்பதே தனிமனித ஒழுக்கத்தை பறைசாற்றும் அங்கமாகத் தான், சங்க காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வொழுக்கம், திருமண பந்தத்தில் ஈடுபட்டிருக்கும், பெண்டீரிடம் இருந்தே ஆக வேண்டும்....அப்போது தான், அம்மங்கை திருமண பந்ததிற்கு சரியானவள் என்ற அங்கீகாரத்தையே அடைய முடியும். ஆக, ஒரு பெண் கற்புள்ளவளாக இருந்தால் மட்டுமே , அவள் தன் கணவனோடு வாழத் தகுதியுள்ளவளாக உருவாககப்படும் நிலை சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறது. இது எதனை வலியுறுத்துகிறது?......

மனம் போல வாழ்க என்று வாழ்த்துதல் என்பது, வெறும் வாய் வாழ்த்தாகவே அமைது விடுதலேயன்றி, மனம் போகும் போக்கில், தன் வாழ்வை அமைத்துக் கொண்டால் சமூக அங்கீகாரம், மறுக்கப் பட்டுவிடும் என்ற மிரட்டலை விடுப்பது போலத் தானே, இவ்வித கற்பு நெறி பறைசாற்றப் பட்டிருக்கிறது என்பது என் கருத்து.

இக்கருத்தினை ஏற்க மறுப்பவர்கள், சமுதாயக் கட்டுக்கோப்பினை முன்னிறுத்தி, கற்பு நெறி தேவை தான் என்ற வாதத்தினை முன் வைத்தாலும், பிறர் உண்ணும் உணவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அதிகாரத்தை மற்றவர் மேல் திணிப்பதற்குச் சமம் என்று, அதைக் கருதுகிறேன்.

கற்பில் சிறந்தவள் கண்ணகி...ஏன்?.... அவள் தன் கணவனைப் பொறுத்தாள். தன்னை அவன் நீங்கினாலும், அவனை அவள் நீங்காமல், கடைசியில் அவன் செய்த அத்துணையும் ஏற்று, அவன் நினைவாகவே வாழ்ந்து, பின் அவனுக்காக , நீதி கேட்டுப் போராடி, பின் ஒரு மாநகரத்தையே எறித்து, தன் கற்பினை வலியுறுத்தினாள். ஆக, தன் கணவன் என் செய்யினும், அவனைக் காத்து, அவன் எதை விரும்புகிறானோ அதை விரும்பி, அவனை அதற்கு அனுமதித்து, தனக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் வாழ்தலே, கற்புடைய மாதர்க்கு அழகு. இதுவே, சமுதாயத்தின் எதிர்பார்பு... ஆசை... ஏக்கம்...

அந்த ஆசையை , சமூகத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கடைபிடித்து வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டயாத்தினை உருவாக்கினால், பின், தான், என்ன செய்தாலும் அவள் தனக்காகவே எப்போதும் இருப்பாள், தான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள் என்ற எண்ணத்திலும், பயத்தின் காரணமாகவும், பின்பற்ற பட்டதே இக்கற்பு நெறி.

இக்கற்பு நெறி எக்காலத்திற்க்குப் பொறுத்தமானது, சங்க காலத்திற்கு மட்டுமே.. இப்போது, அதை ஒரு தலைப்பாக மட்டும் தான் பேச இயலும். காரணம், சமூக மாறுதல்கள்.....

சிலருக்கு, கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களையும் சார்ந்தது தான் என்ற எண்ணம் நிலவுகிறது. இதனால், பெண்களுக்கு மட்டும் விலங்கா..ஆண்களும் அவ்விலங்கினைப் பூட்டிக் கொள்கிறோமே என்ற மடைமையைத் தான் அது பறைசாற்றுவதாக எனக்குத் தோன்றுகிறது.

திருமணத்தின் மூலம் ஒருவனை தனக்குள் வரித்துக் கொண்ட பெண், அவனை விட்டு நீங்குதல் என்பது சாத்தியாமில்லாத அக்காலத்தில் கற்பு, கத்திரிக்காய் என்றெல்லாம் கூறுகிறார்களே அதனால், கணவன் என்ன செய்தாலும், பொறுத்தாக வேண்டிய கட்டாயம் அக்கால பெண்டீருக்கு இருந்தது.

ஆனால், இக்கால பெண்மை அக்கட்டுக்குள் அடங்காதே...மன விரிவாக்கமும், அதைச் சார்ந்த செயல்பாடுகளும்,தன் வாழ்க்கை தன் கையில் என்று, தனக்கென்று எண்ணங்களையும், உறுதியாக வைத்திருக்கும் பெண்மைக்கு, கற்பு என்பது கருப்பானது மட்டுமே.கற்பு நெறியை பெண்கள் ஏற்றால் தான் அப்பெண்மை சிறப்புற வாழ்தல் சாத்தியம் என்பது காலத்தால் , வலுக்கட்டாயமாக திணிக்கப் பட்ட மூட நம்பிக்கையே அன்றி, உண்மையான நிதர்சனமன்று.

கற்பு என்பது, உடல் சம்பந்தப் பட்டது தான், மனச் சம்பந்தப்பட்டது இல்லை என்ற ஐயப்பாடு கொண்டவர்க்கும், இல்லை...அது மன சம்பந்தப்பட்டது தான் உடல் சம்பந்தப் பட்டது இல்லை என்று விவாதிப்போரும், ஒன்றை நினைவில் கொள்ள மறந்து விட்டார்கள். தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையும், அதனால் மகிழ்வுறும் உணர்வும், தனி மனிதனுக்கே சொந்தம். முழுமையாக ஒருவன் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து, புரிந்து, உணரப்படும் உரிமைக்கும், உணர்வுக்கும் இடையே, சமுதாயம் தன் பங்கினை எங்கனம் வகிக்கிறது என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.

Tuesday, December 11, 2007

பெ(ஆ)ண்


ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் பொருத்தமான படைப்பு தானா? பொருத்தம் என்றால், எந்த விதத்தில்? இல்லை என்றால், காரணம் என்ன?

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ! :)

---------------------------------------------- ****** ---------------------------------
காலதாமதமாக இப்பதிவை பதிப்பதற்க்காக வருந்துகிறேன். மன்னிப்பையும் கோருகிறேன். இத்துணை நாட்கள் பொறுமை காத்தமைக்கு நன்றிகள் பல !

ஆணையும், பெண்ணையும் படைத்த இயற்க்கையின் முன் இருவரும் மிகச் சிறந்த பொருத்தம் உடையவரே..உடற்கூறு அளவில்...

ஒருவருக்கொருவர் பொருந்தும் விதத்திலேயே தான், இருவரின் உடற் பரிணாமங்கள் அமைந்திருக்கிறது. ஆனால், பரிணாம வளர்ச்சியினால், செழித்தது, உடற்கூறு மட்டுமல்ல. மனக்கூறும் தான்.

ஆண் ,பெண் இருவருக்கும் , மனரீதியினால் அமைந்துள்ள வேறுபாடுகள், அளவிடற்கரியன. சிந்திப்பதிலும், செயல்படுவதிலும், முனைந்து செயலாற்றுவதிலும், இருவருக்கும் உள்ள வேறுபாடு மிக அதிகமே. எத்துணை தான் வேறுபாடுகள் இருப்பினும், சரிவிகித புரிதல் ஒன்றே, அவ்வேறுபாடுகளை களைந்து, நல்ல உறவு முறைக்கு வழி வகுக்கக் கூடும். ஆனால், இயல்கிறதா? அது தான் கேள்வி !

இருவருக்குமே உறவு முறைகளில், ஒரு வித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தான் மற்றொருவரை, நேசிக்கும் போது, எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படியே தன்னை நேசிப்பவரும், நடந்து கொள்வதே சரியானது என்று எண்ணும் எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பு தான், எத்துணை புரிதல் இருப்பினும், உறவில் குழப்பம் விளைவிக்கும் கூற்றாக அமைந்து விடுகின்றது.பெண் - தான் சொல்வதை ஆண் , காது கொடுத்து கேட்பதேயில்லை என்றும் , ஆனால், எதையும் கேளாமலே, தீர்மானத்திற்கு வரும் குணவான்களாக ஆண்கள் இருப்பதாக கருதுகின்றனர். ஆனால்,ஆணோ -தான் செய்யும் ஒவ்வொரு செயலையும், மேல் நிலைப் படுத்த , பெண் எப்போதும் முயல்வதாகவும், அவர்களை அவர்கள் வழியில் செல்ல பெண் அனுமதிப்பதில்லை என்றும் கருதுகின்றனர்.

வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைக்குண்டான தீர்வை, தனி மனிதனாக சிந்தித்து தீர்த்து வைக்கும் குணம் ஆணுடையது. ஆனால் பெண்ணோ, தன் பிரச்சனைகளை வாய் மூலம் பிறரிடம் பேசி, தீர்மானத்திற்க்கு வரும் குணத்தை உடையவர்கள்.எந்த விஷயத்தையும், பிறரிடம் பகிர்ந்து, ஒரு முடிவுக்கு வரும் பெண்கள், நிச்சயம், பிறரை சார்ந்தே, தனக்கு வேண்டியவற்றையும் தீர்மானிக்கின்றனர். ஆனால், ஆணோ தனக்கு என்ன வேண்டும் என்பதில், தானே சுயமாக முடிவெடுக்கும் குணம் படைத்தவனாக இருக்கிறான்.

பிறரை சார்தல் என்பது, பிறரின் மேல், நம்பிக்கை இருந்தாலொழிய நடக்க இயலாது. பெண், வெகு சுலபமாக, பிறரை நம்பி விடுகிறாள். ஆனால், ஆண் அத்துணை சுலபமாக மற்றவரை நம்பி விடுவது இல்லை.பெண்ணுக்கு, ஒரு பிரச்சனைக்கு, உடனடியாக ஒரு தீர்வு தேவைப்படுவதில்லை. அவர்களை மற்றவர்கள் புரிந்து கொண்டாலே போதும் என்ற மன நிறைவைத் தான் அவர்கள் எதிர்பார்கின்றனர். ஆனால் , ஆணுக்கு, ஒரு பிரச்சனைக்கு உடனடித் தீர்வு தேவை. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால், ஆண்கள் - Result Oriented .

ஒரு பெண், ஆணிடம் தன் பிரச்சனையைப் பற்றி பேசும் போது, அவளுக்கு ஒரு தீர்வினை அந்த ஆண் தர வேணும் என்று எண்ணிப் பேசுவதில்லை. மாறாக, அவள் சொல்வது, முழுதும், கவனிக்கப் படவேண்டும் என்ற எண்ணத்திலேயே, தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறாள்.

ஒரு ஆண், அன்பினையும், காதலையும், பிறர் தனக்குத் தேவை என்ற நேரத்தில் மட்டுமே தான் உணர்கிறான், ஆனால், பெண்ணுக்கோ, அவ்வுணர்வு, தான் மதிக்கப்படும் போதும், பாராட்டிக் கூறப்படும் போதும், பாதுகாக்கப்படும் போதும் உணரப்படுகிறது. ஆக, ஆணுக்கு தன் நிலைப் பற்றிய புரிதல், பெண்ணிடம் கிடைத்தாலே பெரும் திருப்தி கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு, தன்னை பற்றிய உயர்ந்த எண்ணமும், பாரட்டுதலும், ஆண் தன்னிடம் அன்பாகவும், காதலுடடையவனாகவும், இருக்கும் போதே கிடைத்து விடுகிறது.

ஆணின் தேவை, அன்னியோன்யமாக இருக்கும் போதே பூர்த்தி ஆகிவிடுகிறது அந்த அன்னியோன்ய சூழலில் இருந்து விடு பட்டவுடனே, ஆண், மிடுக்கானவனாகவும், சார்தலில்லிருந்து (dependence )விடுபட்டவனாகவும் ஆகிபோகிறான். சிறிது காலம் கழித்த பின் தான், திருப்பவும் அவனுக்கு அன்னியோன்ய சூழல் தேவைப்படுகிறது. தேவைப்படும் போது மட்டுமே, அவன் பெண்ணை சார்ந்திருக்க முடிகிறது.அவன் தேவை பூர்த்தி ஆனதும், அவனுக்கு சார்ந்திருத்தல், தேவையில்லததாக ஆகிறது. இது இயற்கையாகவே அவனுள் நடக்கும் மாற்றம்.

பெண்ணோ இநநி்லைக்கு எதிர்மறை.

விழுந்து எழும் அலைகள் போல, அவளின் உணர்வுகள் வெளிப்படும். எப்பவும் சார்தலையே அவளின் தன்மைகள் பிரதிபலிக்கின்றன. தன் சுய மரியாதை மிகும் இடங்களில், அதாவது தன் சுய மரியாதை வெகுவாக தூண்டப்படும் போது, அவள் மிகுந்த அன்பை ஆணுக்கு வாரி வழங்கி, அன்னியோன்யமாக இருக்க ஆரம்பிக்கிறாள். சுய மரியாதை சற்று குறைவாக இருக்கும் போதும், அவளால், ஆணுடன் , அன்னியோன்யமாக உணர முடிவதில்லை.

பெண்ணுக்கு, அக்கறை, புரிதல்,மரியாதை, பக்தி, மதிப்பீடு, உறுதிப்படுத்தல் ஆகியன தன் உணர்வுகளை சுலபமாக காட்டவும், கிரகித்துக் கொள்ளும், உணர்வுத் தேவைகளாக உள்ளன. ஆணுக்கு, நம்பிக்கை,ஏற்றுக் கொள்ளல், பாராட்டுக்கள்,ஈடுபாடு, சான்றுரைத்தல், உற்சாகப்படுத்தல் ஆகியன உணர்வுத் தேவைகளாக உள்ளன. இவ்விரண்டு நிலைகளையும் சரிவர உணர்ந்து, புரிந்து, செயல் படும் ஆணும், பெண்ணும் சரநிகர் பொருத்தம் , தமக்குள் இருப்பதாகவே உணரப்படுவர்.

தத்தம் ,துணையின் உணர்வுகளையும், இயல்புகளையும் ஏற்றுக் கொண்டாலே, ஒருவருக்கொருவர் பொருத்தமான உணர்வை இருவரும் பெற்று விடலாம். பெண்ணைப் போல் ஆண், எப்போதும் காதல் வயப்பட்டவனாகவும், பாசம் மிக்கவனாகவும் இருக்க இயல்வதில்லை. வாழ்ககையின் பல சவால்களை அவன் சந்திக்க நேரிடும் போது அவனுள் இருக்கும் காதல் மறைந்து, அவன் கடமையும், அவனின் குறிக்கோளுமே அவன் மனதில் உணர்வுகளாக இருக்கிறது. அது அவனின் குற்றம் அல்ல. இயற்கை.

பெண்ணோ, எப்பவும் உணர்ச்சிப்பிழம்பாகவும், காதல் வயப்பட்டவளாகவுமே இருக்கிறாள். எவ்வித சவால் நிறைந்த சூழலும், அவளின் இத்தன்மையை மாற்றுவதிற்க்கில்லை. அது அவளின் இயற்கையாகிப் போகிறது, இவ்விருவரின் நிலையை புரிந்து நடந்தாலே, வீணாக உண்டாகும் விவாதங்களை தவிர்த்து விடலாம்.

ஆணை - அவன் ஒரு ஆண், அவனின் இயல்பு இன்னது தான் என்று முழுதும் தெரிந்து புரிந்து, நடத்துவதாலேயும், பெண்ணை, அவள் தன்மை இது தான் என்ற புரிதலோடு கையாள்வதாலேயும், சுலபமாக ஆண், பெண் பொருத்தத்திற்கு தீர்வு காணலாம். இயற்கைப் படைத்த ஆணும், பெண்ணும், உடல் அளவில், மிகப் பொருத்தம் உடையவரே, என்றாலும், உணர்வு பூர்வமான பந்தம் என்ற நிலையில் பார்த்தால், நாகரீகம் கருதி, ஒருவரின் நிலையை, மற்றொருவர், தெரிந்து, புரிந்து, ஏற்று நடந்தாலே, மனப் பொருத்தமும் அமைந்துவிடும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :)