யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Thursday, November 26, 2009

தட்டுகள் தடையோ !


வாழ்க்கையை வாழும் வகைகளை நாம் பின்பற்றும் வாழும் முறைகளே நிர்ணயிக்கின்றன ! மேல் தட்டு, இடைத் தட்டு மற்றும் கீழ் தட்டு மக்களின் வாழ்க்கை முறைகளில் மிக இலகுவாக இருக்கும் முறையாக நீங்கள் கருதுவது எது? ஏன்?உங்களின் கருத்துப் பரிமாற்றத்திலிருந்து முழுபதிவு தொடரும் !

-------------------------------------------------------------------------------------------------------------------------------

 வாழ்க்கை என்பது பெரும்பாலும் தெரிந்தெடுக்கப் பட்டதாகும். சில சமயம் திணிக்கப்பட்ட வாழ்கையாகவும் அது அமைவதுண்டு. எத்தகைய வாழ்க்கையானாலும், நாம் அதை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறோம் , எவ்வாறு அணுகுகிறோம் என்பதை பொறுத்தே, அதற்குண்டான,பலன் அமையப் பெறுகிறது. எவ்வித சூழலில் நாம் பிறக்கிறோம், எவ்வாறு வளர்கிறோம் என்பதே நாம் வாழும் முறைகளை தீர்மானிக்கின்றது. மேல் தட்டு, இடை தட்டு, கடை தட்டு ஆகிய மூன்று பிரிவுகளாகளைத் தான் நம் வாழ்க்கை உள்ளடக்கியதாக உள்ளது.


மேல் தட்டு மக்களின் வாழ்க்கை முறை அவர்களது செளகரியத்தை சார்ந்ததாகவும், கடைத் தட்டு மக்களின் வாழ்க்கை முறை, கிடைத்ததை வைத்து வாழ்வை ஓட்டும் விதத்தை சார்ந்ததாகவும் , இடைத் தட்டு மக்களின் வாழ்க்கை முறை, மேற்கூறிய இரண்டும் இல்லமால், ஆற்றில் ஒரு கால் , சேற்றில் ஒரு கால் என்ற அளவில் அமைகிறது.

 இதற்கு முக்கிய காரணிகளாக நிர்ணயிக்கப்படுவது எது? வாழ்க்கை பற்றிய நம் எண்ணங்களும் , அதை நாம் பார்க்கும் கோணங்களுமே !

கோடு போட்டு வாழும் வாழ்க்கை ! - இவை இப்படித்தான் பின்பற்றப்பட வேண்டும், இத்தகைய வாழ்வு முறைகளைத் தான் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியான கோட்பாடுகளை இடைத் தட்டு மக்கள் பின்பற்றுவதாலேயே, அவர்கள் மேற்கொள்ளும் வாழ்வு முறை, கடினமாகவும், அக்கடினத்தை சாமாளித்து, வாழ்வை கையாளும் விதமும் அவர்களுக்கு இலகுவாகிறது !

 போகும் போக்கில் வாழ்வை அணுகும் முறை, எளிதானதாகவே அமைந்து விடுகிறது. இத்தகைய வாழ்க்கை முறையையே கடை மற்றும் மேல் தட்டு மக்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்க உட்படுகிறார்கள்.

நினைக்கும் வாழ்க்கையை வாழ போதிய பொருள் ஆதாரம் இல்லை என்பதாலும், அன்றைய பொழுதை வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தினாலும், வரையறைக்குட்பட்ட வாழ்க்கை முறை அவர்கள் கண்களுக்கு புலப்படாமலே போய் விடுகிறது.

எல்லாம் போதிய அளவிற்க்கு மேல் இருப்பதாலேயோ என்னவோ, மேல் தட்டு மக்களும், இந்த நொடி எனக்குப் பிடித்ததாக அமைந்திருக்கிறதா இல்லையா, என்பதில் ஈடுபாடு காட்ட விழைகிறார்கள்.

எதுவும் இல்லை, ஆதாலால் எது கிடைக்கிறதோ அதை சுற்றியே வாழ்க்கை - இலகு - கடைத் தட்டு வாழ்க்கை முறை !

எல்லாமே அளவுக்கு மிஞ்சி இருக்கிறது, என் வாழ்க்கை என் விருப்பம் - மிகவும் இலகு- மேல்தட்டு வாழ்க்கை முறை !

இருக்கிறது - ஆனால் இல்லை, தோற்றப் பிழை போல் வாழ்க்கை - கடினம் - ஆனாலும் வாழ்வோம் -  இடைதட்டு வாழ்க்கை முறை !

Saturday, October 10, 2009

அடக்கத்தில் எல்லாம் அடக்கமா..


எட்டு மாதங்கள் - இடைவெளி------ எண்ணம் சார்ந்த என் எழுத்துக்களுக்கு ! எதனால் என்று ஆராய்வது அத்துணை சுவாரசியமாக இருக்காது என்பதால்,ஏன் பதிவு புதுப்பிக்கபடவில்லை என்று கேள்விக் கணைகள் எழுப்பிய இதயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும், காலதாமதத்திற்கு மன்னிப்பையும் கோரி இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

அடக்கம் அமரருள் உய்க்கும் - அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

என்ற வள்ளுவனின் கூற்று, அடக்கமாக இருப்பது ஒரு மேம்பட்டத் தன்மை என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது.

பொதுவாகவே, அடங்கிப் போகிறவர்களையும், அடக்கமாக இருப்பதற்க்கு முக்கியத்துவம் தருபவர்களையும் நமக்குப் பிடிக்கிறது. ஏன்? இதன் காரணத்தை ஆராய்ந்திருக்கிறோமா ! எதனால் இந்த எண்ணப் போக்கு? எதை எதிர்பார்த்து இப்படி ஒரு எண்ணம் நம் மனதிலும், நம்மாலும், மற்றவராலும் நமக்குள் திணித்து வளர்த்த்ப்படுகிறது? பணிவை நாம் மிகவும் ஆதரிக்கிறோமே ஏன்? பணிதலுக்குப் பின்னால் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்....அத்தகைய பணிதல் நமக்குள் விளைவிக்கும் விளைவுகள் எவை..ஒரு அலசலாக இப்பதிவை வைத்துக் கொள்வோமா..உங்கள் கருத்துக்களை முன் வைத்து மேலும் இதை விரிவாக விவாதிக்கலாம் என்ற எண்ணத்துடன், உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் :)
-------------------------------------------------------------------------------------------------

பணிவு பற்றி எல்லோருக்குமே ஒரே கருத்து தீர்க்கமாக இருப்பதை காண முடிகிறது ! பணிவை நாம் மனமுவந்து ஆதரிக்கிறோம் ! மிகச்சிறந்த உணர்வாகவும், தன்மையாகவும், பணிவு நம்மால் கொண்டாடப்படுவதற்க்கு பல காரணங்கள், ஒன்று : பணியர் பெரியர் !, இரண்டு : பணிதல், தலை கனம் இல்லாத் தன்மையை குறிக்கும் அறிகுறி ! மூன்று : கற்றலுக்கு வித்து, காது கொடுத்து மட்டுமல்லாமல்,பிற விஷயங்களை உற்று கவனித்து உள் வாங்கிக் கொள்ளப் பயன்படும் தன்மை ! நான்கு: சபை நாகரீகம் - பிறரை மதித்தலை காட்டிக் கொள்ள பயன்படும் கருவி !

ஆக பணிதல் மிக அவசியமான, ஒவ்வொருவரும் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டிய தன்மையில் ஒன்று தான்.. மறுக்கவில்லை ! ஆனால் பணிவை நாம் கற்றுக் கொள்ளல் எப்போது மிகுந்த நன்மை பயக்கும்??.. என்பது ஆராயப்பட வேண்டிய விஷயமாகத் தோன்றுகிறது. அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என்ற கூற்றுக்களை எப்பருவத்திலும் புரிந்து ஏற்று அதன் வழி நடக்க முயல்வது, நன்மைகள் பயக்கும் சாத்தியக் கூறுகளை வெளிக் காட்டுவதைப் போல், பணிவு வளர் ! என்ற கூற்றினை,ஒரு தீர்க்கமான தெளிவை நாம் அடைந்த பின்னரே, செயல் படுத்தல் வேண்டும் என்பதே என் கருத்து. சிறுவயதில் பணிவு என்பது, கீழ்படிதல் என்ற தன்மையை வளர்க்கப் பயன்படும் ஒரு கருவி, அக்கால கட்டத்தில் தான், கற்றலின் சுவை விதைக்கப்படுகிறது. சொல்வதை ஏற்றுக் கொள் என்று அறிவுறுத்தும் விதத்தில், அப்பிராயத்தில் கற்கும் எல்லா விஷயங்களுமெ பசுமரத்தாணி போல் பதியும் என்ற உறுதியால் கீழ்படிதல் கருவியாக்கப்பட்டது.

சிறுபிராயம் அடுத்து வளர் இளம் பருவத்தில், பணிவு பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அதை ஏற்று நடக்க முட்படுவது, ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும், தன் கருத்தையோ அல்லது செயலையோ தைரியமாக எவ்வித சூழலிலும் வெளிக்காட்ட தயங்கும் எண்ணத்தை விதைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். வளர் இளம் பருவம் மட்டுமல்லாது, இளம் பருவத்தை எய்திய பின்பும், வாழ்வு பற்றிய தனக்கு உண்டான ஒரு கோணமும், அதனைச் சார்ந்த தெளிவையும் ஒருவன் அடையாமல், பணிவை அதன் கூற்றுக்காக கடைபிடிப்பவர் அனைவருக்குமே மேல் கூறிய பக்க விளைவுகள் நேரிடக் கூறும்.

கற்றல் முடிவுறுவதில்லை ! - உண்மை. வாழ்நாள் முழுதும் கற்றலில் தான் பயணிக்கிறோம். ஆனால் வாழ்க்கையின் அடிப்படை சாராம்சத்தை புரிந்து, தெளிவான் கண்ணோட்டதுடன், வாழ்வை அணுகும் போது தான், தனக்கு ஒரு நிலையான எண்ணப்பாட்டை ஒருவன் வகுத்துக் கொள்ள இயலும். அத்தகைய நிலையில் தான் பணிவின் பயன்பாடு, அவனை மேன்மைப் படுத்தும்.

Monday, February 2, 2009

வளரும் விஞ்(ஞானி) !

போகத்தில் யோகம் - ஓர் அலசல்


மனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கொண்டவள் கைப்பிடித்து, மனதில் இடம் பிடித்து, முலைகள் முகம் பதித்து மடியில் தான் கிடந்தது மனையறம் தான் படந்து வாழ்வோன் போகி.... அதுவும் ஒரு வகையில் யோகமே..... பக்திக்கு இடமிருந்தால் முக்திக்கு வழியுண்டு...... யார் மேல் பக்தி? அடுத்தவனையும் நானாக, எனக்குள் ஓர் அங்கமென பாவனை செய்து சம பாவம் கொண்டு பரிபக்குவம் அடைதல் ஒரு வகை..... அது பாவச்பந்தனம் எனப்படும்...... அதனினும் மேலாம் நிலை ஒன்றுண்டு..... அவனுக்கு/அவளுக்கு உள்ளே இறைவன்.... நான் நீசன்..... அவனுக்கு - இறைவனுக்கு தொண்டு செய்கிறதாய் பாவித்து பிறர்க்கு தொண்டு செய்தல் இவ்வகை..... இது "நைச்சியம்" எனப்படும்.......... முந்தையதில் அகந்தைக்கு இடம் உண்டு..... வரலாம்..... வாய்ப்புண்டு..... பிந்தையதில் அகந்தை என்ற பேச்சே கிடையாது...... மனைவி அணைப்பில் மாயவனை பார்த்தால் என்ன? அங்ஙனம் ஒரு இல்லறத்தான் நினைப்பானேனில், அவனுக்கு கோயில் குளம் தேவையில்லை....... அத்தகைய மேலாம் இல்லறம் முக்திக்கு முதல் படி....... தன் சுகத்துக்காக தன் துணையை பயன்படுத்திக்கொள்ளும் உடல் அனுபவ வெறி இருந்தால் இது நடக்காது..... மனைவியை இவனும், கொண்டவனை அவளும் பக்தியோடு அணைந்தால்? அது பூரண ஒப்புதல்..... ஒப்படைத்தல்..... பரிபூரண நம்பிக்கையும் காதலும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் சங்கம சங்கீதம்..... ஆத்மாவின் ஆனந்த ராகம்...... அதற்கு சரீரம் தாளம் மட்டும் போடும் அனுபவ கச்சேரி..... உள்ளக்குடம் உடைந்த கணம் உணர்வுகள் ஊற்றெடுக்க, அன்பு ஆறாக, நீ - நான் வேற்றுமை நீறாக, பாசம் பிரவகிக்க, அண்மைக்கு அர்த்தமின்றி, அனுபவிப்பவனுமில்லை, அனுபவிக்கப்படுபவளும் இல்லையென்றாகி அனுபவமே மிஞ்சும் நிலை.......
முக்தி என்றால் என்ன? இறைவனும் பக்தனும் இரண்டேன்ற நிலை பொய், ஒரே இறை நிலை தானே முக்தி? முக்திக்கு முதல் படி இங்கே ஆரம்பம்..... துணைக்குள் தேவனை கண்டால், துணையின்றியும் அடையலாம்..... இதிலே இயலாமை- இறைவனை காட்டாது...... உடலெடுத்து வந்த போதே உடனிருந்தும் உணராதவன், உருவமிலாப்பெருநிலையை ஒருநாளும் உணரான்..... இறைவனின் உருவம் இதோ உன்னுடன்..... கோயில் கற்சிலை முன் கும்பிட்டு நின்றவனே! கொண்ட பொற்சிலை பரமாத்மா வாழுமிடம்..... போகமும் யோகமும் ஒருசேர உனக்களித்து இகத்துக்கும் பரத்துக்கும் பெருந்துணையாய் வந்தது - நீ கல்லில் தேடும் இறைவன்........ போகியே, விழித்தெழு..... இன்றிரவே உன் யோக சாதனம் தொடங்கட்டும்..... மனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கவலை கொள்ளாதே...... நீயும் யோகி தான்...... நீ விரும்பினால்...... இன்னும் எதற்காக காத்திருக்கிறாய்? மானிட வர்க்கத்தை வளர்த்து விடு...... நீயும் முக்தி அடை...... :)

பதிவர் : புவனேஷ்வர்

Saturday, January 17, 2009

Look At Things As They Can Be

Your range of available choices right now has no limits. The only limits you have are in your mind.

You've got it in you to succeed. Just make up your mind and stick with it.

You weren't born with any limits on your powers or any set limits to your capacity.

At any moment, you have more possibilities than you can act upon.

Imagine your possibilities and your vision expands.

Capture your dreams in your mind and your life becomes full.

Reach out and touch the limits of your being in your mind.

You can, because you think you can.


--Unknown...

====================================================================

சமீபத்தில், நான் மிகவும் ரசித்தது.....வாழ்க்கையை சுலபமாக்கிக் கொள்ளும் உத்தி ! :)