யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Wednesday, October 31, 2007

S- Solitude, O- Obvious, W - Willful, M for Magnanimous


M - Magnanimous

பெருந்தன்மை.

என்னை மிகவும் கவர்ந்த, என்னுள் எப்படியாது வளர்த்தே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட தன்மைகளில் முதல் நிலை வகிப்பது இதுவே. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது என்னுடைய பிறந்த ஊர். ஒவ்வொரு ஊருக்கென்று தனித்தன்மைகள், அவ்வூரின் பேசும் பாஷை போன்றவை வேறுபடும். சில விஷயங்கள் மட்டுமே நம்மை ஈர்பதுண்டு. அது போல என்னை , என் ஊர் மக்களின் பெருந்தன்மைப் போக்கும், விருந்தோம்பலும், சிறு வயதிலிருந்தே ஈர்த்ததுண்டு.என் வீட்டில் அவ்வளவாக இல்லாத ஒரு தன்மை, என்னை வெளி மனிதர்களின் பெருந்தன்மைப் போக்கினால், மிகவும் ஈர்த்ததில் ஆச்சர்யமில்லை தான். ஆனால், அத் தன்மையை எனக்குள் இயல்பாக கொண்டு வர, பல பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.

எந்த ஒரு தன்மையும் அவரவர் வீட்டிலிருக்கும் மனிதர்களின் இயல்புகளினாலோ, அல்லது பழக்கத்தினாலோ சிறு வயது முதலே, பெரியவர்களால் ஊட்டப்பட்டும், அல்லது அறிவுறுத்தப்பட்டும், அல்லது கால காலமாக தொடர்ந்து வரும் மரபணுக்களினாலோ தான் சாத்தியமகிறது. எந்த ஒரு இயல்புக்கும், பெற்றோரின் அணுகு முறையும், அவர்கள், மிக முக்கியம் என்று அறிவுறுத்தும் பாங்குமே, நம்முள் , அத்தகைய இயல்புகளை வளர்க்க ஏதுவாக இருக்கிறது.

ஆனாலும், பல இயல்புகள், குடும்பத்தார் அல்லாத மற்றவரின் பங்களிப்பாலேயே நம்முள் வளர்க்கப்படுகிறது. ஆனால், எத்துணை பேர், அத்தகைய மாற்றத்திற்க்கு தம்மை தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அவரவர் கையிலே தான் உள்ளது. உலகைப் புரிந்து கொள்ளத வயதில்,. தாய், தந்தை, மற்றும் குடும்பத்தாரின் மூலம் கற்றுக் கொண்ட சில நன்மை தராத இயல்புகளை, உலகம் புரியும் வயதிலேயும், நம்மிடையே வைத்துக் கொண்டு, " நான் இப்படித்தான்" என்று தான் பலரும் சொல்லிக் கொள்கிறோம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் இயல்புகள் , தன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால். அவற்றை தம்முடையதாக்கிக் கொள்ள தீராத ரசனை மிகவும் இன்றியமையாததாகிறது.



எதை நாம் ரசிக்கிறோமோ, அதன் பாலே தான் நாம் ஈர்க்கப்படுகிறோம். எது நமக்குப் புரிகிறதோ, அதன் பால் தான் நம் ரசனையும் செல்லும். அவ்விதமாக எழும்பும் ரசனையை, ரசனை என்பதோடு மட்டும் விட்டு விடாமல், அதை எத்தகைய வழியில் நமதாக்கிக் கொள்கிறோம் என்பதில் தான், நாம் நம்முள் நாம் வளர்க்க விரும்பும் இயல்புகளும் அமையப் பெறுகின்றன.

என் வாழ்க்கையில், இத்தகைய ரசனை தான், பெருந்தன்மைப் போக்கை எனக்குள் நான் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை உறுதியாகப் பதித்தது. சொல்லப் போனால், பெருந்தன்மை போக்கு உள்ளவரெல்லோருமே, நல்லவர்களாகத் தான் அன்றும், இன்றும் எனக்குத் தெரிந்திருக்கிறார்கள். அது உண்மையும் கூட. வாழ்க்கையின் எத்தகைய நிகழ்விலும், இந்த பெருந்தன்மைப் போக்கானது, எதிர்மறையான விளைவுகளை புரட்டிப் போட்டிருக்கிறது.

இரு சகோதரர்களுக்குள்ளே நடைபெறவிருக்கும் சொத்து பாகப்பிரிவினையில் கூட, ஒருவரின் பெருந்தன்மைப் போக்கானாது, மற்றவரின் மனதை நொடிப் பொழுதில் , முழுதும் மாற்றிய விந்தையை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நல்ல உறவு முறைகளுக்கு அன்பு எப்படி ஆதாரமோ, அதே போல் தான், பெருந்தன்மைப் போக்கும், நல்ல உறவு முறைகள் காலங்காலமாய், சீர் பட நிலைத்து நிற்கக் காரணமாய் விளங்குகின்றது.

பெருந்தன்மையினால், ஒருவர் உயர உயர செல்கிறாரே அன்றி, அவர் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அடிக்கடி, மனதிலெழும், வள்ளுவனின் வாக்கு,

" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்"

- இக்குறள் பெருந்தன்மையையே பிரதிபலிப்பதாக நான் கருதுகிறேன். அகிம்சை வழி என்பது எப்படி, வீரியமிக்க வழியோ, அதே போல தான், பெருந்தன்மைப் போக்கும், வீரியமிக்கது.சிலருக்கு இயல்பிலேயே இருக்கும் இத்தன்மை வியக்கத் தக்கதே. அதெல்லாம் குடும்பத்திலேயே வரணும்" - என்று அங்கலாய்பதில் அர்த்தம் இருந்தாலும், பிரயத்தனப்பட்டாகினும், இத்தன்மையை நமக்குள் நாம் வளர்க்க முயற்சித்தால், இத்தன்மை நம்மையும், நம்மைப் போல் பிறரையும், நல்ல உறவு மேம்பாட்டில் எப்போதும் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Monday, October 29, 2007

S- Solitude, O- Obvious, W for Willful


மனத்திட்பத்துடன் (Willful) கூடிய மனத்திண்மை(Determination).

பொதுவாகவே எந்த ஒரு செயலுக்கும், அது செம்மையுற நடைபெறவும், நம் மன ஓட்டமே காரணமாக அமைகிறது. இச்செயலை நன்கு செய்ய வேண்டும் என்று எண்ணும் பட்சத்தில், அதை நன்கு செய்து முடிப்பதும், இச்செயல் அத்துணை முக்கியத்துவம் இல்லை என்று எண்ணுகையில், அதனை அத்துணை முனைப்போடு செய்யாமல் போவதும், நம் மனத்தினால் எழும் எண்ண ஓட்டங்களினாலேயே நிகழ்கின்றது. ஆக, ஒரு செயல், அதனை செய்யும் திறன், அத்திறனை சரியான விகிதத்தில் பயன்படுத்தி, நற்பயன் காணும் போக்கு எல்லாமே நம் மனத்திட்பத்தாலும் அதனை அடுத்து நமக்கு கிடைக்கும் மனத்திண்மையினாலுமே அமையப் பெறுகிறது.

எப்படி, அதிகாலை துயில் எழ, உடம்பைப் பழக்க வேண்டும் என்று எண்ணி, அதனை தினமும் மேற்க் கொண்டு உட்லை பழக்குகிறோமோ, அவ்வாறே, நம் மனத்திண்மையையும் பழக்கப் படுத்திக் கொள்ளலாம். எல்லாமே பழக்கத்தில் அமைவது தான் .சித்திரமே கைப்பழக்கத்தில் அமையப் பெறும் போது, மற்றதெல்லாம் எம்மாத்திரம்.

முதலில்,செயலைச் செய்வதில் மனத்திட்பம் என்றால் என்ன, என்று பார்ப்போம். எந்த ஒரு செயலையும், இதை செய்தால் என்ன, என்று தீர்க்கமாக எண்ணுவது தான் மனத்திட்பம். தீர்க்கம் என்ற நிலை உண்டாகும் போதே, அச்செயலை செய்ய ஒரு வித ஈடுபாடும், அச்செயலை எப்பாடு பட்டாகினும் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியையும் நாம் பெறுகிறோம்.

மனத்திட்பம் என்பது, முதலில் நம்மை ஒரு செயல் தொடங்க நம்மை ஈடுபடுத்தும் செய்கை தான்.இதைத் தான் When there is a will, there is a way என்று கூறியிருக்கிறார்கள். ஒரு செயலில் நம்மை முனைக்கச் செய்யச் செய்தாலே போதும், அச்செயலை ,எத்தகைய வழியில், அதை சீர்படச் செய்யும் வழி தானாகவே புலப்படும்.வழி புலப்பட புலப்பட, அச்செயலை செய்யும் ஆர்வமும், அதனை செம்மையுற செய்து முடிப்பதில், உறுதியும் பிறக்கும். மனத்திட்பத்தை நமக்குள் பழக்கினாலே, மனத்திண்மையை நாம் பெறுவது உறுதி.

மனத்திண்மை என்பது, நம் ஆளுமைத்திறனை(Personality development) வளர்க்கச் செய்ய பெரும்பாலும் உதவுகிறது. எப்போது, ஒரு செயலைச் செய்ய நம் மனத்திட்பத்தினால் , அதனை அணுகுகிறோமோ, அப்போதே, அச்செயலினால், நம் ஆளுமையில் (Personality), வாக்குறுதி (அ) கடமைத் திறன் (Commitment) அதிகரிக்க ஆரம்பிக்கிறது. கடமைத்திறன் அதிகரிக்க அதிகரிக்க, நம் பொறுப்புக்களை (responsibilities) முழு ஈடுபாட்டோடு நாம் எடுத்து செய்ய, நம் ஆளுமை பழகிக்கொள்கிறது.

பிறகு, எந்த ஒரு செய்லை நாம் செய்ய, அதில் ஈடுபட்டாலும், நாம் வளர்த்த மனத்திண்மையானது, அச்செயலை, கடமைத்திறனுடனும், தலையாய பொறுப்புடனும், செய்து முடிக்க வழி நடத்துகிறது. இதுவே பழக்கமாகி விட்ட பட்சத்தில், நம் ஆளுமை, எச்செயலையும் கச்சிதமாக (perfect) செய்து முடிக்கவே செய்யும். கச்சிதமாக முடிக்கும் மனோபாவத்தைப் பெற்று விட்டாலோ, எதையும் இலகுவாகவும், ஆர்வத்துடஞும் அணுகும் வித்தை நமக்குத் தெரிந்து விடும்.

என்னுள், இத்திறன் இயல்பாக அமைந்து விட்டதாக எண்ணுகிறேன். ஆனாலும், பல செயல்களுக்கான வித்தை, பலரின் துணையோடு தான் செயல் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

முனைக, வளர்க ! :)

Wednesday, October 24, 2007

S for Solitude - O for Obvious


Obvious

புரிதல் - தெளிவாக புரிந்து கொள்ளுதல். இத்தன்மை என்னுள் இயல்பாக இருக்கிறதா, அல்லது நானாக என்னையும் அறியாமல், அதன் பால் ஈர்க்கப்பட்டு அத்தன்மைக்கு முக்கியத்துவம் தந்தேனா என்பது பற்றி அதிகம் யோசிக்கவில்லை. நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளுக்கும், அதனைச் சார்ந்த விளைவுகளுக்கும், இந்த புரிதல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது, என்னுடைய அபிப்ராயம். எங்கே நாம் புரிந்துக் கொள்ளப்படுகிறோமோ, எங்கே நம்மால் மற்றவர்களை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறதோ, அங்கு ஒரு செளகரியமும், திருப்தியும் உண்டாக்கப்படுகிறது. செளகரியமாக உணர்ந்தாலே, நமக்கு தேவையான சூழல் கிடைத்து விடுகிறது. நல்ல சூழல் அமைந்தாலே, நல்ல உறவும் மேம்படுகின்றது.

பிரச்சனைகள் என்பது அறவே உண்டாகாமல், தடுக்கும் வழியாகவே இப்புரிதலைக் கொள்ளலாம். எல்லோருக்குமே, புரிதல் என்பது முக்கியமானதாகவே கருதப்படுகிறது. என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க .. என்பது தான் பெரும்பாலானோரின் அங்கலாய்ப்பு. பல பிரச்சனைகளை நம்முடைய நிலையில் இருந்து மட்டுமே பார்பாதாலும், பரிசீலிப்பதாலுமே, அப்பிரச்சனைக்கு சரியான தீர்வை சுலபமாகவும், நடு நிலையாகவும் எடுக்க முடியாமல் போகிறது. நம்முடைய சூழ்னிலைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே, பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. எனவே தான், நம் பக்கம் மட்டுமே நியாயம் இருப்பதாக நமக்குப் புரிகிறது. அதனாலே, நாம் பாதிக்கப்பட்டது நியாயம் இல்லை என்ற உணர்வும் எழுகிறது.

நமக்கென்று வரும் பிரச்சனைகளி நாம் பாதிக்கப்படும் போது, நாம் உணர்ச்சிகளின் ஆழத்திற்குத் தள்ளப்படுகிறோம். அதனாலேயே, மற்றவரின் , உணர்வுகளும், அவர் பக்கம் இருக்கும் நியாயங்களும் நமக்கு புரிவதில்லை. நம் காயம் தான் பெரிதாக உணரப்படுகிறது. அத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பில் அடுத்தவரின் செய்லும் அல்லது நடத்தையும் பூதாகாரமாகவே தோற்றமளிக்கிறது. இது தான் உண்மை நிலவரம் என்று நாம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாலோ நம்முடைய உணர்வுகள் மேலும் பாதிப்புக்குள்ளாகி, ஏற்ப்பட்ட காயம், ரணமாக ஆகி, வடுவாகவும் பதிந்துவிடுகிறது.

இத்தகைய நேர்வை நம்மால் நிச்சயமாக தடுக்க முடியும். நம்முடைய உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், அல்லது முக்கியத்துவத்தை சற்று குறைத்துக் கொண்டு, இரு பக்க நிலையையும் புரிந்து கொள்ள முயன்றாலே, நமக்கு ஏற்படும் வடுக்களையும், மற்றவருக்கு நம்மால் ஏற்படும் ஒரு வித அசெளகர்ய நிலையையும் தவிர்க்க இயலும்.

என்னுள் இத்தன்மை எப்பவும் அகலாமல் பார்த்துக் கொள்ளத்தான் நான் விழைகிறேன். :)

Saturday, October 20, 2007

A for Apple -- S for Solitude !


தானாக கோடு போட்டு, அதன் மேலும், கீழுமாகவும்,அல்லது அதன் மேலேயேவோ செல்வது என்ற இயல்புப் படியே இதுவரை என் பதிவுகள் இருந்து வந்திருக்கின்றன. சுருங்கச் சொன்னால், என் இஷ்டப்படியே என் பதிவுகளும், அதன் சாராம்சங்களும்.

இப்போது புதிதான ஒரு அனுபவம் தரும் வண்ணம், குமார் அவர்களின் உந்துதலின் பேரில், என்னுள் நான் விரும்பும், வளர்க்க ஆசைப்படும் இயல்புகளைப் பற்றித் தனித்தனிப் பதிவுகளாக எழுத முயன்றால் என்ன..என்ற எண்ணத்தோடே, இப்பதிவானது சம்ர்பிக்கப்படுகிறது.

உங்க சொந்தகதை, சோகக்கதைலாம் எதுக்குங்க இங்க...! என்ற எதார்த்த எண்ணமிருப்பவர்கள், பின் வரும் ஒரு சில பதிவுகளை, ஒரு குறிப்பிட்ட தலைப்பில், நான் சொல்ல விருப்பப்படும் கருத்துக்களாக மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Solitude - தமிழில் இதற்கு " தனிமை" என்ற பொருள். பொதுவாகவே, தனிமை என்பதே ஏதோ, வெறுமையான உணர்வு போலவும், ஒவ்வாத ஒன்றாகவுமே சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அடடா..! தனிமை என்னை இப்படி வாட்டுகிறதே என்று புலம்புவதற்கும், ஆகா..! என்ன ஒரு அருமை இந்தத் தனிமை - என்று புளகாங்கிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள்: உண்டல்லவா.

ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால்..,

Like to be alone is completely different from feeling loneliness. A person who like to be alone, chooses the environment where he/she feels the enjoyment within himself/herself. It is a tendency of being detached from the group, without planning or trying to be alone from the group. No one can do any practice to develop that tendency of being alone.

The exact meaning for loneliness is unhappy .Because you have no friends or people to talk to, you feel the loneliness. Loneliness is a sad feeling feel by a person when he misses something aroud him. But aloneness is, something , a person like to be with.


I am not saying, being alone is heaven for someone who really don’t want to be alone. There are people who like to be with a group, like to share things with the group. I am not declaring , aloneness fetches you heaven in earth, if you adopt that. Instead, I said, the people who like to be alone finds more enjoyment with their aloneness.

I can even say in a simple way too. Sharing needs two people atleast. If the other person , whom we like to share our things may differ from the thoughts of what we share to him/her. Sharing expects recognition.

Why we like to share things?.

We like to put ourself in a comfort zone by sharing. It is one of the way of getting recognition from the person to whom we share our things. Its all depend upon the person. We would like to share our things to people who are ready to listen/accept/console. Sharing doesn’t mean to be positive all the time. It also includes criticisms/difference of opinions.

Sharing can happen with a person often, if he/she gives you the comfort of understanding. We cant share things with everyone, even when we like to be in the group. Sharing is possible only with people who has better understanding about us and about the concept what we deliver. It’s a kind of happiness we feel, when someone really understand us or listen us wholeheartedly. Most of the people prefer to share things with others. They feel some peace by sharing.

The people who prefer to be alone feels the same peace , even they are out of group. I am not degrading the people who like to be with the group. But I can say, for SOME, being alone is preferable and they feel more enjoyment while they are alone compare to be with the group.

So(w) I am :)