யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Thursday, November 1, 2007

S- Solitude, O- Obvious, W -Willful,M - Magnanimous , Y for Yield


Y - Yield

பணிதல்

பொதுவாகவே பணிந்து போவதென்பதை அடங்கிப் போவதாகவும், நமக்குத் தகுந்த நிலை அல்ல அது என்பதாகவுமே ்பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.ஒருவருக்கு கீழ் அடங்கிப் போதல் என்பது, ஏதோ நம்மையே நாம் அவர்க்கு கீழ் அடகு வைத்தது போலே தான் உணரப்படுகிறது. கிட்டத்தட்ட தன் நிலை தாழ்தல் போலவே, பணிதல் நிலை உணரப்படுகிறது. காரணம், " நான்" என்ற தன்முனைப்பு எண்ணமே. நம்மையே நமக்கு அறிமுகப்படுத்துதலும் அதுவே.

பொதுவாகவே, மற்றவர் நமக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம். நமக்கு அடங்கியிருப்பவர்களைத் தான் பெரும்பாலும் நாம் நேசிக்கிறோம். நம் சொல் பேச்சு கேட்பவர்களையும், நமக்குத் தலை ஆட்டுபவர்களையுமே நாம் அன்பு கொள்ளத் தலைப்படுகிறோம். அது தான், நாம் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த முறை என்றும் நினைக்கிறோம். காரணம், மற்றவர் நமக்கு முன், அடங்கிப்போகும் போது, நம் தன்முனைப்பு ஆனந்தம் கொள்கிறது. நம் உயரம்், அவர்கள் தலை தாழ்தலால், மேலும் உயரமாகிப் போகின்ற உணர்வைப் பெறுகிறோம்.

உற்று நோக்கினால், அப்படி ஒருவர் நமக்கு அடங்கிப்போதல் என்பது பாசாங்கு மட்டுமே. நாம் சென்றபின் , அளவுக்கு அதிகமாக, அடங்கிப்போனவர் எம்பிக் குதிக்கும் மன நிலையில் தான் இருப்பார். அதனால் தான், மேலதிகாரிகளிடம், மிகவும் அடங்கிப் போபவர், தனக்கு கீழ் இருப்பவர்களை வாட்டி வதைப்பபராகவே இருப்பார். அடங்கியிருப்பது பணிவாகாது. அது மரியாதையும் ஆகாது. அது சமயோஜித புத்தி மட்டுமே,.

பணிந்து போவதில் , கீழ்படிதலும் ஒரு வகையே. ஒரு நிகழ்வின் சகல விளைவுகளையும் புரிந்து கொள்வதால் மட்டுமே கீழ்படிதல் சாத்தியம். கீழ்படிதல் என்பது தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமால், தன் பணி சிறக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அதற்காக ஒருவரின் பேச்சுக்கு கீழ்படிந்து போவது.எதைச் சொன்னாலும், பணிந்து போவது என்றில்லாமல், நியாயமானதிற்க்காக பணிந்துபோவதே.

அடங்கியிருத்தல், கீழ்படிதல், இவை மட்டும் பணிதலின் வகையாகாது. இவை எல்லாவற்றிலும் உயர் நிலை உண்டு. அது தான் நான் இப்பதிவின் மூலம் தெரிவிக்கவிருத்த நிலை. ஒப்படைத்தல். சரணாகதி அடைதல்.மேற்கூறிய நிலைகளில், ஒருவர் மட்டுமே ஈடுபட அதிக வாய்புண்டு. ஆனால், ஒப்படைத்தல், பரஸ்பரம் நிகழக் கூடியது. இந்நிலையில் தான் இரு " நான்" களும் காணாமல் போகக் கூடிய சாத்தியங்கள் அதிகம்,இரு நபர்கள், தத்தம் தன்முனைப்பை, தாமிருவரும் ஒப்படைக்கும் விஷயத்திற்க்காக உதறி தள்ளி உறவு பாராட்டிக் கொள்ளல் சாத்தியமாகிறது.

தம்மை முழுதும் இழத்தல் ஒரு அரிதான நிலையே. நான் சொல்லும் இக்கருத்துகள் தத்துவார்த்தமாகத் தான் இருக்க இயலும். படித்து தெரிந்து, புரிந்து கொள்ள இந்நிலை சாத்தியமே இல்லை.உணர்ந்து மகிழ வேண்டிய நிலையே இந்த ஒப்படைத்தல் நிலை.

ஒப்படைப்பவர்களுக்கு கட்டளைகள் தேவையில்லை. வேண்டுகோள் போதுமானது. அதிகார தோரணை தேவையில்லை. அன்பு செய்கை போதுமானது. குறிப்புகள் தேவையில்லை.குறிப்பறிதல் போதுமானது. சொல்வதற்கு முன்பே செயல்கள். ஆழ்ந்த உள்ளுணர்வு மிகைப்படுவது ஒப்படைத்தலினால் தான். மொட்டுகள் மலர்வது எப்படி கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் நிகழ்வாக இருக்கிறதோ, அப்படியே இந்த ஒப்படைத்தலில் உறவு மலர ஆரம்பிக்கும்.

அடங்கிப்போபவர்கள் தான் அடக்கி விடுபவர்களாகவும் ஆகிறார்கள், அத்தகையவர்கள், ஒப்படைத்தலின் சுவை தெரிந்து கொண்டால், அவர்களின் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை இயலாமையால் கிடைத்தவையாய் இல்லாமல், அன்புமயம் என்ற ஆழ்ந்த குளத்தின் குளிர்ச்சியால் கிடைத்தவையாயிருக்கும்.

இத்தகைய சுவையை ஏட்டில் புரட்டி மட்டும் சுவைக்காமல், பரஸ்பரம் அதை முழுதும் சுவைத்த , சுவைக்கின்ற நிகழ்வை என்னால் எழுத்தின் மூலம் வடிக்க இயலவில்லை !

6 comments:

Anonymous said...

arumaiyaana post ithu sath...inthe oppadaithal kanavan manaivi uravil aduthu nalla natpil unaralaam...inthe santhosam unmailaye unara mattume mudiyum.

Sowmya said...

hey gee welcome !

Happy to see u here.and very very happy to receive a comment from you for this post :)

Anonymous said...

Kuppan_2007 says

yet another good posting.

Nam samoogathil oppadaithal or ego illathu iruthalai, Ilicha vaaythanam endru muthirai kuthi vidukirargal. Adhanaalthaan adhan suvai ariyaamal palarum ego noyinaal thunba padugiraargal.

Valarum nalaiya talaimuraikku naam indha nalla pazakkathai katru kodukka vendum.

aanaal palli aasiriyakalidam thaan ego adhigamaga kaana padukirathu,

Pala aasiriyargal indha oppadaithal pazakkathai verukkindranar. Avargal oru potti niraindha samoogathaiye uruvaaka virumbugindranar.

Saga manidahanai pottiyalanaga karuthaamal parasaparam purindhu kolluthal, kootu muyrachi & kootu vetrikku vazi vagukkum.

Vaazthukkaludan

Kuppan-2007

Sowmya said...

hi kuppan,

##
Nam samoogathil oppadaithal or ego illathu iruthalai, Ilicha vaaythanam endru muthirai kuthi vidukirargal. Adhanaalthaan adhan suvai ariyaamal palarum ego noyinaal thunba padugiraargal. ##

Unmai :)

## Pala aasiriyargal indha oppadaithal pazakkathai verukkindranar. Avargal oru potti niraindha samoogathaiye uruvaaka virumbugindranar.##

Suvai purinthal thane veruppthum ,virumbuvathum.

oppadaithal enbathu, oruvarukku keezhe adangi povathu endru ninaithal, eppadi athai aatharikka mudium.

meelum purinthu kondu thanmunaippai izhakka mudiathu, athu thaanaga nadaipera vendiya nilai.athai unarthuthal iyalatha nilai.

## Saga manidahanai pottiyalanaga karuthaamal parasaparam purindhu kolluthal, kootu muyrachi & kootu vetrikku vazi vagukkum.##

Ivaigal miga sirantha pothu vazhigal, parasparam nangu pazhaga.
oppadaithal endra nilayai thaamaga unarthu kolla seyya koodiya vitthaga ivvazhigalai kollalam :)

arumaiyaana pinnootam :) nandri

Kumar said...

பரஸ்பரம் ஒப்படைத்தல் - எந்த எதிர்பார்ப்புமின்றி, தான் என்ற பிடிப்புகளிலிருந்து விடுபட்டு ஒருவரை ஒருவர் சார்வது - என மிக உயர்ந்த ஒரு மன நிலை / உறவு பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள்.

எங்கேயோ போய் விட்டீர்கள்.

வாழ்த்துக்கள் :)

Sowmya said...

குமார்,

வாய்பளித்தமைக்கு என் நன்றிகள் பல. :)