யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Saturday, July 21, 2007

சுயநலம் வளர்.. !

சுயநலம் ஆக்கப் பூர்வமான ஒன்றா? பெரும்பாலும், இதில் உடன்பாடு இல்லாமல் தான் இருக்ககூடும். சுயநலம் சிறப்பான ஒன்று என்று நான் கூறினால், உடனே ஏற்றுக் கொள்ளுதல் இயலுமோ?

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதும், மகிழ்வித்துக் கொள்வதும் சுயநலம் தான். சுயநலம் என்றதும் பொதுவாய் பிறர் நலத்தைக் கவர்ந்து சுயமாய் அமைத்துக் கொள்ளும் நலம் என்றே நினைப்பதனால் வரும் கோளாறு தான் இது.

வாழ்வியலில் சிறப்பான ஒரு அம்சம் தான் சுயநலம்.ஒருவன் தன்னையே முழுதாய் நினைத்துக் கொண்டு வாழ்வை ஓட்டிச் சென்றால் அது சுயநலம் தான். கீதையின் தத்துவம் போல, பலனை எதிர்பாராமல் தன் காரியத்தில் தான் ஈடுபடுவதும் - இந்த கண்ணோட்டத்தோடு பார்த்தால் இது சுயநலம் தான். சொல்லப் போனால் வெகு ஆரோக்கியமானதும் கூட.

மனநலத்திற்கும், சுயநலத்திற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தனக்கே நல்லதாகவும், தனக்கு நன்மையை தர வல்லதாகவும் ஆக்கிக் கொள்ளும் விஞ்ஞானமே மனநலம். சுயநலம் என்றதும், நமக்கு அது ஒரு கேவலமான நிலை என்ற பொருளே தொனிக்கிறது இதுதான் மனவியலில் வினோதமான விதி. நாம் வார்த்தைகளை குறியீடுகளாகவே பயன்படுத்தி பழகிக் கொண்டிருக்கிறோம்.

வாக்கியங்களின் அர்த்தங்களை உணராமல், வார்த்தையின் ஒலிகளை குறியீடுகளாக்கிக் கொள்வதாலேயே சிக்கல்.அதனால் தான் சுயநலம் என்ற சொல்லை அர்த்தம் புரிந்து கொள்ளாமல், கேவலமாகவே சித்தரிக்கப் பட்ட சொல்லாகவே நம் வழக்கில் நாம் கொண்டு விட்டோம்.

நாம் சமூகத்தில் ஓர் அங்கம். நாமே நமக்குள் தனியாக வாழ்வது இயலாத நிலை. அப்படி வாழ்வதும் ஏற்புடையதாகாது. இதற்கெல்லாம் சுயநலம் என்பதை சரியாக புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. சமூகத்தோடு இயைந்து வாழ்ந்தும், அதே சமயம், தன் இயல்பினை இருத்திக் கொள்வதும். இவ்விரண்டும் ஒரு சேர அமைத்துக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டாலே வாழ்வில் சாதனை மிக எளிதாகி விடும்.

சமூகத்தில் நாம் ஒரு அங்கம் , என்பது போல், ச்மூகமும் நம்மின் விரிவாக்கம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உலகம் பிறந்தது எனக்காக..ஓடும் நதிகளும் எனக்காக என்ற எண்ணத்தோடு சமூகத்தை அணுகும் நோக்கு தென்பட்டாலே, நாம் சமூகத்தில் இயங்குவது எளிதாகிப் போகிறது. அனைத்தும் எமதே என்று கருதுவது ஆணவமாகாது. எனக்கே அனைத்தும் என்று கருதுவது தான் ஆணவம். இவ்விரண்டில் உள்ள அர்த்த வேறுபாட்டை நாம் புரிந்து கொண்டாலே, சுயநலம் என்பதை எதிர்மறையாக நாம் எண்ணாதிருப்போம்.

அக்காலத்து சுயம்வரம் கூட சுயநலத்தை நன்கு சித்தரிக்கும் வகையில் தான் நடந்தேறி வந்திருக்கிறது. இக்கால நிலைப் போல , பெற்றோர் பார்த்து வைக்கும் வரனில், தன்னை இணக்கம் செய்து கொண்டு, தம் விருப்பம் என்ற ஒன்றை விலக்கி, வாழ தயாராகும் பெண்ணிடம் சுயநலம் இருக்கக் கூடாது என்று தான் உலகம் நினைக்கிறது. தனக்கு தானே செய்து கொள்ளும் நியாயமான காரியங்களையும் பிறருக்காக விட்டுவிடும் பொது நலமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. அப்படி மற்றவருக்காக தம் வாழ்வை தியாகம் செய்வதில் பெருமை இருப்பதாகத் தான் நாம் கருதுகிறோமே அன்றி, நம்மை அழித்து மற்றவரைக் காத்து, அச்செயலுகுண்டான முழு அர்த்தமும் விளங்காமல், ஜீவிப்பதை என்றாவது ஒரு நாள் மனம் எண்ணாமல் போகாது. அதனால் பூரண திருப்தியும் வாழ்வில் ஒருவர்க்கு கிடைக்காது.ஆனால், வெளியே சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் தான் பெரும் பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு முன் நியாயமாகவும், தேவையாகவும், தர்மமாகவும் புலப்படுபவை நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவுபவை. இவற்றை நோக்கி நாம் முன்னேறும் போது ச்முதாய ரீதியாய் நாம் கற்றுக் கொண்டவை தடையாககின்றன. ஒரு புதிய கருத்தினை கூறும் போது, விவேகானந்தர் விவரித்தபடி கேலி(ridicule), ஆட்சேபம்(opposition) வந்தபின் தான் ஏற்பு(acceptance) அமையும். கேலிக்கும், ஆட்சேபத்திற்கும் அடிபணிவதும், சமுதாயத்தை மீறி சுய நியாயத்தை நிலை நிறுத்தாமல் விட்டுவிடுவதும் சுயநலமல்ல. ஒரு ஆழமான கோக்கில் பார்த்தால் இது பொது நலமும் அல்ல.

மனவியல் ரீதியாக சமூகத்தில் சிறப்புடன் இயங்க, ஒருவருக்கொருவர் இயைந்து நடக்க, அடிப்படையான தேவைகள் நான்கு. வெளிப்படை (openness), பிற நேயம் (empathy), ஏற்பு(acceptance), அக்கறை(caring) வெளிப்படையாய், நம் விருப்பு , வெறுப்பு காட்டினால் , நம் எல்லாமும், எல்லார்க்கும் தெரிந்துவிடும் என்பதும் பாதுகாப்பு தான். ஆனால் பாதுகாப்பு என்பது பல கதவுகளை பூட்டி வைப்பதை விட, சன்னல்கள எல்லாம் திறந்து வைப்பதில் தான் உள்ளது. வெளிப்படை என்பது பூரணமாக வெளிக்காட்டிக் கொள்வதல்ல. தெளிவாய் இருப்பதை உணர்த்துவது.

பிற நேயம் என்பது, மற்றவரது வருத்தங்களை உணர்ந்து கொள்வது. பிறரின் சிக்கல்கள் விளங்கினால் அவர்களை நாம் பாதிக்காமல் இருக்கலாம். நாம் பாதிக்காத எவருமே நம்மை பாதிக்கப் போவதில்லை. நாம் பாதுகாப்பாக இருக்க இதுவும் ஒரு சிறந்த வழி முறையே.

ஏற்பு என்பது, மற்றவரை நம் போல குறை, நிறையோடு ஏற்றுக் கொள்ளுதல்.இது போன்ற தன்மையை வளர்த்துக் கொண்டால், நம்மையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஒருவர் இருக்கிறார் என்று நாம் நினைப்பது போலேயே, மற்றவரும் நினைக்கும் நிலை ஏற்படும். நம் வாழ்வு செழிக்க இவ்வித நிலை ஏதுவாக இருக்கும்.

மேற்கூறிய குண நலன்களை பிறர் நலத்துக்காகத் தான் நாம் காணுகிறோமே அன்றி, நம் சுயத்தை செழுமைப் படுத்த நாம் வளர்த்துக் கொள்ளும் குணங்களாக நாம் கொண்டாலே, சுய ந்லம் என்பதின் முழு அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

6 comments:

balar said...

sowmya, நான் ரெண்டு தடவை படித்திட்டேன் இன்னும் எனக்கு புரியமாட்டேனுது..:))
சுயநலம் நல்லது என்கிறீர்களா இல்லை கூடாது என்கீறீர்களா..நீங்கள் கூற்வதை பார்த்தால் சுயநலத்தில் பலவகைகள் உள்ளது போல் தெரிகிறதே.

இதுவரை சுயநல்ம் என்றால் "எந்த செயலை செய்தாலும் அதில் ஒரு எதிர்பார்ப்ப" இருந்தால் அதுதான் சுயநலம் என்று நினைத்திருந்தேன்..

//வெளிப்படை (openness), பிற நேயம் (empathy), ஏற்பு(acceptance), அக்கறை(caring)//
இந்த நான்கு குணங்களுக்கும் தாங்கள் கொடுத்த விளக்கம் மிக் அருமை..

Sree's Views said...

Sowmya...vandhu comment :)

Sowmya said...

Balar,

நான் பதிவில் கூறியபடி, சுயநலம் என்பதற்குண்டான பொருளை நாம் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். சுயநலத்தின் மூலம் நாம் அடையும் நன்மைகளைத் தான் விரிவாகத் தந்திருக்கிறேன். சுயநலம் வளர் என்பது தானே தலைப்பே :)

Ashok said...

One more terrific write up from you ! Naam namathu vaazhvil oru sila "values" and "principles" kondu vaazhvathe suyanalam endru karuthalaam. In an episode of the SITCOM "Friends" Phoebey will be challenged by Joey saying that there exists a feeling of good while helping or giving up something which can be termed as selfish. What he says is that if at all we sacrifice or help, the feeling of good deed is as such "selfish". While the SITCOM is a comedic one, there lies a serious point in what it said. While we sacrifice or help, the feeling of good is yours and as you said "selfish" gives a wrong meaning but in turn it is just a feeling amongst the human. When you see a write up which reflects on what you have been thinking and trying to follow, it gives immense pleasure. Very impressive !

Sowmya said...

Ashok ,

:))

Thiru said...

An excellent write up, infact demanding lots of thinking!

I believe everybody acts or attempts to act in their self interest, in one way or other irrespective of whether they are conscious of it or not. Even the so called sacrificial acts performed is because they believe and have set it as their values and principles that would give them happiness, its the way they wish to derive happiness or satisfaction for their actions.

as ashok said
//Naam namathu vaazhvil oru sila "values" and "principles" kondu vaazhvathe suyanalam endru karuthalaam.//

yes... I guess that helps the person to be in harmony with his innate nature and the circumstances in which he lives in. Just alter his innate nature and the kind of circumstances he lives in, you are sure to find changes in his values and principles and so his actions.

Anyway if one can clearly see the fine line which Sowmya tries to draw here, then it will give much needed clarity for one's decision in any kinds of act in their life.