யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Sunday, August 19, 2007

சுதந்திரம் ஒரு வேள்வியே !

சுதந்திரம்...இச்சொல் மிகவும் பிரபலமான சொல். ஆனால், இச்சொல்லை நாம் உச்சரிக்கும் போதே நம் நாடு சுதந்திரம் அடைந்து ...என்று ஆரம்பிக்கும் ஏதோ ஒரு செய்தி தான் இந்தியர்களான நம் எல்லோருக்கும் நியாபகத்திற்கு வரும். நம் நாடு ஆங்கிலேயரின்ன் கீழ் அடிமைப்பட்டுக் க்டந்து, பல் வேறு தடைகளைத் தாண்டி, பல் வேறு மனிதர்களின் போராட்டத்தினால் பெறப்பட்டதே இச் சுதந்திரம். ஏன் அவ்வாறு சிரமப்பட்டாது, சுதந்திரம் பெற வேண்டும்? என்ன காரணம்?

சுதந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது? சுதந்திரம் என்பதை எப்படி வரையறுப்பது? சுதந்திரம் என்பது, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே, யாரையும் சாராமல், தாமே தம் திறன் மூலம் செயல்படுவது என்று கொள்ளலாமா.அதனால் தான் இந்தியர்களான நாம், நம் நாடு, நம் மொழி, நம் பேச்சு, நம் எழுத்து என்று அனைத்திற்குமே சுதந்திரம் வேண்டும் என்ற காரணத்தினால், ஆங்கிலேயனிடமிருந்து போராடி நம் உரிமையைப் பெற்றோம்.

ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது கருத்து, மொழி, எழுத்து, குடிஉரிமை என்று பல் வேறு வடிவமெடுத்து, அதை செயல்பாட்டிலும் கொண்டு வர ஏதுவாக, சட்டமும் , ச்முதாயமும் பல் வேறு கோணங்களில் சிந்தித்திது செயல்படுகின்றன. இவையெல்லாம் நாட்டிற்கும், அதன் மக்களுக்கும்.

தனி மனித சுதந்திரம்?? இதனைப் பற்றி பொதுவான அபிப்ராயம் என்ன எனறு பார்த்தால், நாடும், நாடு சார்ந்த சட்டங்களுமே தனி மனிதனுக்கும் பொறுந்தும் என்ற அளவில் தான் சுதந்திரம் என்பது வரையறுக்கப்படுகிறது. ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது என்ன. இவை மட்டும் தானா. இவையும் தான், ஆனால் இது வெளித்தோற்றத்திற்க்குண்டான சுதந்திர காற்றை சுவாசிக்க பயன்படும் கோட்பாடுகள். மனிதனுக்குள்ளே சுதந்திர தன்மை என்று இருக்கிறதே, அதைப் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமா?

ஒரு தனி மனிதனின் உண்மையான சுதந்திரம் என்பது, அவன் இஷ்டப்படுபவைகளை எத்தடையும் இல்லாமால், யாரையும் சாராமல், சுயமாக சிந்தித்து சரியாக செய்வதேயாகும். இவ்வாறு சுதந்திரத்தை நாடும் ஒருவன், தன்னை, தன் சுயத்தை (self)
முன்னேற்றும் வகையில் தன்னைப் பண்படுத்திக் கொள்வதில் தான் அவனின் முழு சுதந்திரமும் அடங்கியிருக்கிறது. பண்படுத்திக் கொளவது என்றால் எப்படி?

தன்னை பாதிக்கும் எவ்வித பொருளிலும், செயலிலிருந்தும் விலகிச் சென்று, தன்னைக் காத்துக் கொள்வதும், எதிலும் அதீத பற்றுக் கொள்ளாமல், தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமல் இருப்பதும், எவ்வித கலாச்சாரத்திலும் அதீத ஈடுப்பாட்டோடும், அவ்வகையான ஈடுபாட்டினால், திறந்த மனத்தன்மை இழக்காமல் இருப்பதும்,மனதை பாதிக்கும் இறந்த கால நிகழ்வுகளை சுமக்காமல், கவலையை களைந்தெடுத்து வாழ்வதும்,எவ்வித உணர்வு பூர்வமான விஷயத்திலும் தன்னையே மூழ்கடித்துக் கொள்ளாமல், தன்னைச் சுற்றி, தானே வெளி வர முடியாத வண்ணம் சுமுதாய சிந்தனைகளையோ, பழக்க வழக்கங்களையோ, சம்பிரதாயங்களையோ வகுத்துக் கொள்ளாமல், தானே தன்னை எவன் ஒருவன் ஆள்கிறானோ அவனே பூரண சுதந்திரத் தன்மை வாய்ந்தவனாகக் கொள்ளப்படுவான்.

இவற்றையெல்லாம் செய்த்து முடிக்க மன உறுதி அதிகம் தேவைப்படுகிறது. தன்னை "மிகவும் சுதந்திரமானவன்" என்று அறிவித்துக் கொள்ள மிக அதிகமான மன திடம் தேவைப்படுகிறது. மனதிடத்தை வளர்த்தாலே, சுதந்திரக் காற்றை அவன் சுவாசிக்கும் நாள் அவனுக்கு வெகு தூரத்தில் இல்லை என்று கொள்ளலாம்.

தன்னைத் தானே அறிதல் ஒரு சுவாரசியம் என்றால், பூரண சுதந்திரம் அனுபவித்தல் அதை விட சுவாரசியமான அனுபவம். ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் விலை ஏராளம். இத்துணை காரியம் செய்து பண்பட வேண்டி இருக்கிறதே. தாகம் உள்ளவர்க்கு வேள்வி கூட சர்வ சாதாரணமே..

No comments: