யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Tuesday, August 21, 2007

அடுத்த நொடியில்..அற்புதம் !

"யார் மனசுல யாரு...அவருக்கென்ன பேரு..","கலக்கப் போவது யாரு", "லொள்ளு சபா",சமீபத்தில் விஜய் டிவியில் இடம் பெறும் நிகழ்ச்சிகளைன் தலைப்புகள் தான் இவை. சொல்லப் போனால், நிறைய ரசிகர்கள் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கென்றே இருக்கிறார்கள். வருடக் கணக்கில்,இது மாதிரியான நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப ்படுகின்றன.தொய்வு இல்லாமல் இது போன்ற நிகழ்ச்சிகள் ,வெற்றி அடைய காரணங்களை ஆராய்ந்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இப்பதிவு.

(வேதாந்தத்தையே படித்துப் போன மனங்கள், இது போன்ற பதிவினைப் பார்த்தாவது மனம் மகிழட்்டுமே :P)

மீடியா என்றழைக்கப்படுகின்ற ஊடகங்களின் தாக்கம், கிட்டத்தட்ட ஒரு 10 வருடங்களாக மிகப் பெரிய அளவில் தான் இருந்து வருகிறது. இருபது வருடங்களுக்கு முன்னால், தமிழகம் முழுதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு பார்க்க ஆர்ம்பித்தார்கள். வெள்ளி ஒளியும் ஒலியும், ஞாயிறு இரு சினிமா- மதியம் பிராந்திய மொழித்திரைப்படம்- மாலை தமிழ் படம் என்று சென்னைத் தொலைக் காட்சி ஒளிபரப்ப, அதை வைத்த கண் வாங்காமல், ஆஆ...என்று பார்த்த மக்களிடத்தில் அப்போதைக்கு பெரிய எதிர்ப்பார்ப்புகள் என்று எதுவும் ஊடகங்களின் மேல் இல்லை. வாரம் ஒரு படமும், அரை மணி நேர திரை இசைப் பாடல் காட்சிகளுமே, மிகுந்த திருப்தியாக இருந்திருக்கிறது அவர்களுக்கு.

ஆனால், நாளடைவில் பல அலைவரிசைகளைக் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக ஆரம்பித்ததும், இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படமோ அல்லது திரை இசைப் பாடல்களோ, மிக சல்லிசாகப் போய்விட்டது. முதலில் எப்போதோ ஒரு படம் என்று ஆரம்பித்த போது, இருந்த ஆர்வம், இப்போது படங்கள் பார்ப்பது எப்பவும் இயன்ற ஒன்று தான் என்ற அளவிலே, ஆர்வம் என்பது சற்று குறைந்து தான் விட்டது. Trend என்று சொல்லப்படும் போக்கு இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. முன்பு அவர்கள் என்ன கொடுத்தார்களோ, அதை பார்க்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருந்தது, இப்போதோ, மக்களுக்கு என்ன ஆர்வமோ அதை தான் ஊடகங்கள் தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகியிருக்கிறது. இது ஒரு வகையில் ஆரோக்கியமே. பார்ப்போர் வட்டம் பெரிதாக இருப்பதால், பல தனியார் தொலைக் காட்ச்சிகளின் போட்டாப் போட்டிக்கிடையில், யாரை எந்த பக்கம் இழுத்தால், விளம்பரதாரகளை அதிகம் வரவழைக்க முடியும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு மக்களிடம் நிலவிய சீரியல் தொடர்களை தவறாமல் பார்க்கும் மோகம் இப்போது குறைந்து விட்டது. அதற்கு காரணம், அப்போது, போட்டிகென்று சம நிலையில், சன் டிவிக்கு நிகராக எந்த டிவியும் இல்லாத நிலை. எனவே, அவர்கள் பெரும் பாலும், ஒளிபரப்பு செய்த் சீரியல் தொடர்களையே மக்கள் விரும்பிப் பார்த்தனர்.

ஆனால் சமீப காலமாக, பல் வேறு வித்ங்களில் சீரியல் தொடரை விட சுவாரஸியம் தரும் நிகழ்ச்சிகளை மற்ற தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டதால், மக்களின் ரசனை அதற்கு தாவி விட்டது. இதுவும் மிக ஆரோக்கியமானதே. மக்களை எப்படியாவது ஒரு அரை மணி நேரம் உட்கார வைத்தால் போதும் என்ற நிலையில் தான் இப்போது, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் புதுப் புது உத்திகளை கையாள்கிறார்கள். இதனால், புதிதான எண்ணங்களுக்கும், இளைய சமுதாயத்தினரின் படைப்புத் திறனுக்கும் நல்ல தீனி கிடைத்திருக்கிறது.

விளம்பரதாரர்கள் கூட, படைப்புத்திறனைக் காண்பித்தால் தான், மக்களை விளம்பர இடைவேளைகளில் கூட உட்கார வைக்க முடியும் என்று உணர்ந்து, விளம்பரப் படங்களை எடுத்து வருகின்றனர். ஆகவே,ஊடகங்கள் கையில் மக்கள் என்ற நிலை மாறி, மக்களுக்காக ஊடகம் என்ற ஆரோக்கிய நிலை வந்து விட்டது. எதன் மூலம் , எந்த பிரிவினரை கவரலாம் என்று புதிய புதிய எண்ண ஓட்டங்களுடன் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க பல குழுமங்கள் கூடி, கூட்டு வேலை செய்து, ஒரு நிகழ்ச்சியின் வெற்றியை நிர்ணயிக்கின்றனர்

சமீபத்தில் நான் ரசித்த இரு விளம்பர படங்களை இங்கு தர விழைகிறேன். மிக அற்புதமான படைப்புத் திறனை இவ்விரு படங்களும் எனக்கு உணர்த்தின. சிலாகித்து தான் போனேன். :






இப்பதிவின் மூலம் நான் தெரிவிக்கவிருந்த கருத்து இது தான்...

எப்பவும் ஒரே மாதிரி விருப்பங்களும், சிந்தனைகளும் இருப்பதில்லை. கால ஓட்டத்திற்கு தக்ந்தபடி, புதிய பரிமாணங்களோடு வரும் எணணங்களும், சிந்தனைகளும் நம்மை ஆட்கொள்கின்றன. சிந்தனைகள் புதிதாக இருக்க, செயல்பாடுகளும் புதுமை வாய்ந்ததாகவே இருக்கப்படும். இன்று இருப்பது, நாளை இருப்பதில்லை. நாளை இருப்பது, வரும் காலத்தில் நிலைத்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. அடுத்த நொடி காத்திருக்கும் ஆச்சர்யங்களுக்காக தான் மனித மனம். அடுத்த நொடி என்னவாகும் என்ற நினைவு கொடுக்கும் ஆனந்தம் தான் நம்மை இந்த நொடியில் வாழ் வைத்துக் கொண்டிருக்கிறது.

8 comments:

Thiru said...

yet to read the post... but viewed the ads, they are simply superb!

balar said...

நல்லா சொன்னீங்க private channelsல வருகின்ற serialகள் பத்தி..நல்லா நினைவருக்கு நான் shool padikkrappa, sun tvல குடும்பம் ஒரு serial வந்நது..மம்மி அதை போட்டு பார்த்து தொல்லை பண்ணுவாங்க.அதிலும் அந்த serial வர்ற ஹீரோயின் எப்ப பார்த்தாலும் அழுது கிட்டேதான் இருப்பாங்க..நான் அவங்க சிரிச்சு பார்த்ததே இல்லை..என்ன கொடுமை மம்மி இதையும் உட்கார்ந்த்து பார்க்குறீங்கன்னு தான் கேட்க தோனும்.

அந்த ரெண்டு Adம் நல்லா இருக்கு..ஆனால் முதல் AD length அதிகம்..சில ADs ரொம்ப shorta இருக்கும் but catchya இருக்கும்..

Priya said...

I liked the first of all. Well never watched it before.

Its all about timing, performance and action. Well as a father, he did based on action where time counts. Those dyas nobody had a watch and ita all about sunlight and how peoples realities based on what they do.

Good one.

Thiru said...

wow good analysis !

Sree's Views said...

Good post , Sowmya.
I like 'airtel super singer' programme....kuttis paadaradhu cuteaa irukkum.

yeah..sometimes the advts are more attractive than the actual programme. My favs are UTI bank (twin girls) and Ponds age miracle .
enjoyed reading the post :)

Sowmya said...

hi Thiru,Balar,Priya and Sree

Thanks for all ur feedback :)

Kumar said...

Very good.

The Sonata ad is pivoted on linking the value 'TRUST' to the brand image of 'TATA' Very well executed...வேலுவா...மணி நாலு ஆச்சு..reflects the trust Velu gets due to the product. The kid's expression when Velu bids him tata is amazing!

Nice finishing lines, Sowmya. Really enjoyed reading this.

Sowmya said...

kumar,

Only very few are noting the minute things in an advt. Nice :)