யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Monday, October 29, 2007

S- Solitude, O- Obvious, W for Willful


மனத்திட்பத்துடன் (Willful) கூடிய மனத்திண்மை(Determination).

பொதுவாகவே எந்த ஒரு செயலுக்கும், அது செம்மையுற நடைபெறவும், நம் மன ஓட்டமே காரணமாக அமைகிறது. இச்செயலை நன்கு செய்ய வேண்டும் என்று எண்ணும் பட்சத்தில், அதை நன்கு செய்து முடிப்பதும், இச்செயல் அத்துணை முக்கியத்துவம் இல்லை என்று எண்ணுகையில், அதனை அத்துணை முனைப்போடு செய்யாமல் போவதும், நம் மனத்தினால் எழும் எண்ண ஓட்டங்களினாலேயே நிகழ்கின்றது. ஆக, ஒரு செயல், அதனை செய்யும் திறன், அத்திறனை சரியான விகிதத்தில் பயன்படுத்தி, நற்பயன் காணும் போக்கு எல்லாமே நம் மனத்திட்பத்தாலும் அதனை அடுத்து நமக்கு கிடைக்கும் மனத்திண்மையினாலுமே அமையப் பெறுகிறது.

எப்படி, அதிகாலை துயில் எழ, உடம்பைப் பழக்க வேண்டும் என்று எண்ணி, அதனை தினமும் மேற்க் கொண்டு உட்லை பழக்குகிறோமோ, அவ்வாறே, நம் மனத்திண்மையையும் பழக்கப் படுத்திக் கொள்ளலாம். எல்லாமே பழக்கத்தில் அமைவது தான் .சித்திரமே கைப்பழக்கத்தில் அமையப் பெறும் போது, மற்றதெல்லாம் எம்மாத்திரம்.

முதலில்,செயலைச் செய்வதில் மனத்திட்பம் என்றால் என்ன, என்று பார்ப்போம். எந்த ஒரு செயலையும், இதை செய்தால் என்ன, என்று தீர்க்கமாக எண்ணுவது தான் மனத்திட்பம். தீர்க்கம் என்ற நிலை உண்டாகும் போதே, அச்செயலை செய்ய ஒரு வித ஈடுபாடும், அச்செயலை எப்பாடு பட்டாகினும் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியையும் நாம் பெறுகிறோம்.

மனத்திட்பம் என்பது, முதலில் நம்மை ஒரு செயல் தொடங்க நம்மை ஈடுபடுத்தும் செய்கை தான்.இதைத் தான் When there is a will, there is a way என்று கூறியிருக்கிறார்கள். ஒரு செயலில் நம்மை முனைக்கச் செய்யச் செய்தாலே போதும், அச்செயலை ,எத்தகைய வழியில், அதை சீர்படச் செய்யும் வழி தானாகவே புலப்படும்.வழி புலப்பட புலப்பட, அச்செயலை செய்யும் ஆர்வமும், அதனை செம்மையுற செய்து முடிப்பதில், உறுதியும் பிறக்கும். மனத்திட்பத்தை நமக்குள் பழக்கினாலே, மனத்திண்மையை நாம் பெறுவது உறுதி.

மனத்திண்மை என்பது, நம் ஆளுமைத்திறனை(Personality development) வளர்க்கச் செய்ய பெரும்பாலும் உதவுகிறது. எப்போது, ஒரு செயலைச் செய்ய நம் மனத்திட்பத்தினால் , அதனை அணுகுகிறோமோ, அப்போதே, அச்செயலினால், நம் ஆளுமையில் (Personality), வாக்குறுதி (அ) கடமைத் திறன் (Commitment) அதிகரிக்க ஆரம்பிக்கிறது. கடமைத்திறன் அதிகரிக்க அதிகரிக்க, நம் பொறுப்புக்களை (responsibilities) முழு ஈடுபாட்டோடு நாம் எடுத்து செய்ய, நம் ஆளுமை பழகிக்கொள்கிறது.

பிறகு, எந்த ஒரு செய்லை நாம் செய்ய, அதில் ஈடுபட்டாலும், நாம் வளர்த்த மனத்திண்மையானது, அச்செயலை, கடமைத்திறனுடனும், தலையாய பொறுப்புடனும், செய்து முடிக்க வழி நடத்துகிறது. இதுவே பழக்கமாகி விட்ட பட்சத்தில், நம் ஆளுமை, எச்செயலையும் கச்சிதமாக (perfect) செய்து முடிக்கவே செய்யும். கச்சிதமாக முடிக்கும் மனோபாவத்தைப் பெற்று விட்டாலோ, எதையும் இலகுவாகவும், ஆர்வத்துடஞும் அணுகும் வித்தை நமக்குத் தெரிந்து விடும்.

என்னுள், இத்திறன் இயல்பாக அமைந்து விட்டதாக எண்ணுகிறேன். ஆனாலும், பல செயல்களுக்கான வித்தை, பலரின் துணையோடு தான் செயல் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

முனைக, வளர்க ! :)

4 comments:

Unknown said...

Nothing much to add, your honor!!! :)

Kumar said...

Good treatment of the topic.
Nicely carried over to commitment and linked to perfection.

Once again, the image in the post....it speaks loud & clear :)

Sowmya said...

Hey sk,

Thats really an encouraging comment :) Thanks!

Sowmya said...

Hi kumar,

Thank u once again for ur motivation for this kinds of topics :)