யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Sunday, April 1, 2007

எது வளர்ச்சி !


வளர்ச்சி என்பது, ஒரு ஊரைக் குறிக்கின்ற வகையிலே அடுக்கு மாடிக்கட்டிடங்க்களையும், அந்த ஊரின் தொழில் வளர்ச்சியின் அறிகுறிகளையும் வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது..

இதுவா ! உண்மையான வளர்ச்சி ?

வளர்ச்சி என்பது இவ்வாறாகவே பார்க்கப்பட்டு விட்டது. வல்லரசு நாடுகளின் மத்தியில் அந்த நாடுக்ளுக்கு இணையாக நம் நாடும் உருவாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது.

வளர்ச்சி என்பதை பணம் புழங்கும் பல இடங்களையும், சிவப்பு கம்பளம் விரிக்கும் அங்காடிகளையும் வைத்து எடை போடுவதில் தவறில்லை என்றாலும், அவற்றின் விஸ்தீரணத்தை மட்டுமே வைத்து முழம் போட வேண்டியதில்லை என்பதே உண்மை.

கட்டிட வளர்ச்சிகளை காட்டிலும், முக்கியமாக கருதப்பட வேண்டிய நம் மன நிலை, நம் ஊக்கம், நம் சால்பு, வாழ்க்கை குறித்த நம் பார்வை , இவற்றை நம் வளர்ச்சி என எடுத்துக் கொண்டால், நம் நாட்டின் வளர்ச்சி செயற்கையாக இல்லாமல் , இயற்கையாக பரிமளிக்க் கூடும்.

ஒரு நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும், அதில் வாழ்பவருடய் மன நிலையின் அடிபடையிலேயே நிர்ண்ணயிக்கப்படுகிறது. ம்ற்ற நாட்டவரின் சுய் நலமில்லா தன்மை ம்ற்றும் என் நாடு, என் மக்கள் என்ற எண்ணம் நம் நாட்டு மக்களிடமும் பிரதிபலித்தால் நம் நாடு உண்மையான வளர்ச்சியை தொடும் நாள் வெகு தூரத்தில் இல்லை !

(முதன் முறையாக தமிழ் தட்டச்சு, அச்சுப் பிழை இருப்பின் மன்னிக்கவும் !)

2 comments:

balar said...

வாழ்த்துக்கள் sowmiya, தங்களுடைய புதிய தமி்ழ் blogகிற்கு...முதல் பதிவே நாட்டின் வளர்ச்சியை பற்றியது..மிக அருமையான பதிவு..
நீஙகள் கூறியது மிகவும் உண்மைதான்..

:)

Sowmya said...

ந்ன்றி பாலர் :)