யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Friday, April 6, 2007

உடுக்கை இழந்தவன் கை போல ..


ந்ட்பு என்பது, பகிர்ந்து கொள்வது , அன்பு செலுத்துவது, தோள் கொடுப்பது, துயர் துடைப்பது, உற்சாகம் தருவது, உயர்வில் மகிழ்வது, தன் சுதந்திரத்தை இழக்காமல் ஒற்றடமாய் இருப்பது.

இவற்றை எல்லாம் உண்ர்ந்து தான் நட்பு பாராட்ட்ப்படுகிற்தா?

இவற்றின் அடிப்ப்டையில் தான் நட்பு நிர்ணயிக்கப்படுகிற்தா?

எதை தேடுவது நட்பு? எதை கொடுப்பது நட்பு?

பகிர்ந்து கொள்ளல் உள்ளதே ! புரிந்து கொள்ளலுக்கு முக்கிய பங்கு இல்லையோ

குதர்க்கமாக யோசிக்கிறேனோ !

உள்ளதை உள்ளவாறே ஏற்றுக் கொள்ளல் தானே நட்பு. எனக்கு தகுந்தபடி நீ இரு, அப்போது தான் நட்பு பாராட்ட முடியும் என்ற் விதிகளை போடுவதா நட்பு.

என்க்குள் இருப்பது நட்பு தானா என்பது தெரிவதற்க்கு முன்பே , நான், என் நண்பன், என் தோழமை என்று ஒரு பெயரைக் கொடுத்து விடுகிறோம்
உண்மயில் நட்பு உணரப்படுவதற்க்கு முன்பே, நட்பின் ஆழ்த்தை ருசிக்க துடிக்கிறோம்.

வள்ளுவனின் குறளில் கூறும் நட்பு -- யாருக்கும் தெரியாமல் ஆடை சரி செய்யும் உடுக்கை இழந்தவன் போல , யாருக்கும் தன் நண்பன் படும் துன்பம் தெரியாமல் காப்பாற்றும் ஆதங்கம் கொள்பவனின் நட்பு தான் சிறந்த நட்பாக கருதப்படும்.

அத்தகைய நட்பை தேடியாகினும் பெற்றுக் கொள்ள்க என்கிறார் வள்ளுவர்.
இதுவும் ஒரு வகை சுய நலமே ! இங்கு நல் வழி படுததல் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நட்பு விமர்சிக்கப்படுகிறது.

காமம் கலவா காதல் = நட்பு

நட்பு கலவா காதல் = காமம்

இப்படி கூட விளக்கம் தரலாமே !
காதலில் கூட எதிர் பார்ப்பு என்பது தவிர்க்க் முடியாதது.

ஆசை + அன்பு = காதல்

அன்பு + அன்பு = நட்பு

ஆதலால், அன்பு செய்வீர் உலகத்தீரே !

உதடுகளால் பேசி நட்பு பாராட்டுவதை விட உள்ளம் உடையட்டும், அதில் ஊற்று பெருகட்டும் ! அப்போது தான் நட்ப்பின் உண்மை சுவை தெரியும்.

9 comments:

balar said...

நட்பை பற்றி நல்லதொரு பதிவு..முதலில் பாராட்டுக்கள்..

/*ஆசை + அன்பு = காதல்
அன்பு + அன்பு = நட்பு*/
காதலுக்கும் நட்புக்கும் நல்ல விளக்கம்..:)

/*காமம் கலவா காதல் = நட்பு*/
புரியவில்லை..அப்ப காதல் தான் நட்பா..காதலிக்காதவர்களுக்கெல்லாம் நல்ல நண்பர்கள் கிடையாதா...:)

/*உதடுகளால் பேசி நட்பு பாராட்டுவதை விட உள்ளம் உடையட்டும், அதில் ஊற்று பெருகட்டும் ! அப்போது தான் நட்ப்பின் உண்மை சுவை தெரியும்.*/அருமையான வரிகள்..

Sowmya said...

பாலர் ->>நன்றி

காமம் கலவா காதல் = நட்பு

காமம் கலந்தால் என்று குறிப்பிடவில்லை.

"கலவா" - கலக்காமல்

என்று தான் குறிப்பிட்டு உள்ளேன். :)

Danieleaswar said...

வணக்கம் செளமியா
மிகவும் அருமையான கருத்துக்கள் இவை உங்களுக்குள் இருந்து வந்திருந்தால்(இல்லாமல் தருமி கோயில்மண்டபத்தில் பெற்றதுபோல் கிடைத்தா என்ன http://www.youtube.com/watch?v=paVn36tNRA4 மிகவும் சந்தோசம்.
"ஒற்றடமாய்...." என்றால் என்னவென்று விளக்கம் தருவீர்களா

Sowmya said...

ந்ன்றி. :)

ஒற்றடம் என்றால் தனித்து விளங்குவது.

Sowmya said...

எதுவுமே யாருக்கும் சொந்தமில்லை. தெரிந்ததை சொல்ல பல வழிகள் உண்டு. தெரிந்ததை , அறிந்தும், புரிந்தும், உண்ர்வு பூர்வமாக அனுபவித்தால் தான், அதன் சுவையை பிறர் அறிய ப்கிர்ந்து அளிக்க இயலும்.

தருமியின் இயலாமை அவரை , பிறரை நாட செய்தது.மேலும் அது கதைக்கு சுவாரஸ்யம் அளிக்க அள்ளி தெளிக்க்ப் பட்டவை. :)

Danieleaswar said...

மன்னித்துக்கொள்ளவும் ஏதும் பிழையாக குறிப்பிட்டிருந்தால் நான் வெளிநாட்டிலேயே பல காலங்கள் இருந்ததாலும் அண்மையில்தான் தமிழை சிறுவீதம் கற்றிருப்பதாலும் என் தமிழில் பிழையிருப்பின் மன்னிக்கவும். மற்றும் உங்களைப்போன்றவர்களை பார்க்கையில்மிகவும் பெருமைப்படுகின்றேன்.

Sowmya said...

சொல்லில் குற்ற்ம் இல்லை. பொருளில் தான் குற்றம் இருக்கிறது. .."

ஹா ஹா....

இது கூட தருமிக்கு சொன்ன வரிகள் தான் .. : :)) மன்னிப்பு என்கிற பெரிய வார்த்தைகளை தவிருங்கள்.

none said...

நல்ல தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்!

Sowmya said...

ந்ன்றி. :)