யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Monday, April 9, 2007

இன்றைய இளைஞர்கள் !

இக்கால இளைஞர்களிடம் அமைதியின்மை (restlessness) அதிகமாக்க காணப்ப்டுகிறதே, அதன் காரணம் என்னவாக இருக்கக் கூடும்.?

வாய்புகள் ஏராளம் ! போட்டிகள் அதிகம்.

ஒரு காலத்தில் நாங்கள் எப்படியெல்லாம் பொறுமையாக இருந்தோம். இப்போது இவர்களுக்கு பொறுமை ஏது? - இது மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு இக்கால இளைஞர்கள் ஆளாகத்தான் வேண்டியுள்ளது.

நாம் சகிப்புத் தன்மையை தான் பொறுமை என்று கூறி வந்திருக்கிறோம்.அப்போது உள்ள காலகட்டத்தில், நமக்கு இலக்குகள் குறைவு. அதனால் வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. ஆதலால் போராடி வாழ்கையை அமைத்துக் கொள்ள நிர்பந்தம் அமையவில்லை.

வாய்ப்புகள் அதிகமாக அதிகமாக, வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் இடத்தில் அமைதியின்மை அதிகரிப்பது இயல்பான ஒன்று தான்.

மோட்டார் சைக்க்ளின் பின்னால் உட்கார்ந்து பயணிப்பவ்ரின் மன நிலை வேறு. வண்டியை ஓட்டுபவரின் மன நிலை வேறு.

இலக்கை சென்று அடைந்தாலே போதும், என்கிற் மன நிலையில் தான் , பின்னால் உட்கார்ந்திருப்ப்வர் இருக்கிறார்.ஓட்டுபவரோ, வேகத்தை நேசிப்பவராக , எவ்வளவு வேகம் செலுத்தினால் இலக்கை இலகுவாக சென்று அடைய முடியும் என்று திட்டமிடுகிறார்.

எவ்வளவு வித்தியாசம்.

நாம் வாழ்ந்த வாழ்கை வேறு.அவர்கள் இப்போது எதிர் நோக்கும் வாழ்கை வேறு. சொல்லபோனால், நாம் அவர்களை விட ஆனந்தமான வாழவை அனுப்வித்து விட்டோம்,.

அந்தக் காலத்தில்.......என்று கூறி, ஒப்பிட்ட்டுப் பார்த்து, இன்றைய இளைஞ்ர்களைப் பற்றிய ஒரு குறுகலான மதிப்பீடுகளுக்கு வருவது சரியா???

1 comment:

balar said...

ஆஹா..எங்களை சப்போர்ட் பண்ற அருமையான் பதிவு..உங்களுக்கு மிக்க நன்றி..