யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Tuesday, June 26, 2007

மூன்றாவது கண் திறந்திடுமா

"லிவிங் டுகெதர்" (living together) ஒழுக்கமான நெறிமுறையா ? - கீர்த்திவாசன்

கீர்த்திவாசனின் இந்த கேள்வி எனக்கு,"living together "அதாவது"சேர்ந்து வாழுதல்" பற்றி விரிவாக எழுத உதவி இருக்கிறது.முதற்க்கண் அதற்க்காக என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

நெறி முறைகள் என்று நாம் வகுத்தவை எவை? ஏன் நெறிமுறைகள் வகுக்கப்பட்டது? நெறிமுறைகள் இல்லாத வாழ்வு வாழ்வாகாதா? நெறிமுறைகளுக்காக நாமா? அல்லது நமக்காக நெறிமுறைகளா? இவ்வாறெல்லாம் கேள்விகள் ஒவ்வொரு மனதிலும் எழலாம். அதற்கு, அவரவர் எண்ணுதலுக்கேற்ப்பவும், நம்பிக்கைகளுக்கேற்ப்பவும் உண்டான பதில்களை அவரவரே சிந்தித்து,முடிவு செய்து,அதனை செயல ்படுத்திக்கொண்டிருக்கலாம். இது தான், நாம் எல்லோரும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருப்பது.

நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நெறிமுறைகளை நாம் நம் முழு ஈடுபாட்டோடு தான் செயல்படுத்திக் கொண்டிருகிறோமா? அதாவது, சட்டம், ஒழுங்கு, வரைமுறைகள், நெறிமுறைகள், பண்பாடு, கலாச்சாரம் இவை எல்லாவற்றிலும், நமக்கு பூரண உடன்பாடு இருக்கிறதா என்றால், பரிபூரணமான உடன்பாடு என்பது இல்லாமல் இருப்பது தான் சாத்தியம். ஆனாலும், அதை நாம் ஆதரிக்கிறோம்.ஏன்?

எல்லா நேரங்களிலும், எல்லா மனிதர்களும், சீராக இயங்குவதில்லை. ஒரு சிலர் மட்டுமே, மனம், அதன் சாட்சி என்று இயங்குகின்றனர்.மற்றவர், எந்த வழி சுலபமான வழியோ அதை பின்பற்றி, வாழ்வை சுலபப்படுத்திக் கொள்கிறார்கள்:.இவ்வாறு இயங்குபவர்கள் தன் நலம் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள், பிறர் நலத்தை பாதிக்கத் தான் செய்கிறார்கள். இத்தகைய இன்னல்களிலிலிருந்து,பிறரை காக்கவே, இந்த சட்டம், ஒழுங்கு முறைகள், நெறிமுறைகள் உண்டாக்கப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்து தான் பண்பாடு, கலாச்சாரங்கள் பின்னப்பட்டன. ஆகவே, நாம் நாமாக இயங்க, சமுதாயம் இடம் கொடுப்பதே இல்லை. அது சாத்தியமும் இல்லாமல் போயிற்று.

நாம் எல்லோருமே அஞ்சி வாழும் வாழ்வையே, மிகவும் எளிதாக்கிக் கொண்டுள்ளோம். சாலை விதிமுறைகளில், வெள்ளைக் கோட்டை மீறினால், தண்டிப்புக் கட்டணம் கட்ட வேண்டிவரும் என்பதால் தான், அதை மீறாமல் இருக்கிறோமே ஒழிய, நமக்குள்ளேயே, அக்கோடு எதனால் போடப்பட்டது என்ற விழிப்புண்ர்வும், அதை மதித்து நடக்க வேண்டும் என்ற உள்ளுணர்வும் இருக்கிறதா? பழமொழி ஒன்று உண்டு.. சமய சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோருமே திருடர்கள் தான்.

உண்மையாகவே நாம் நாகரீகம் தெரிந்த மனிதர்கள் தாமோ? நாகரீகத்தை நுனி நாக்கு ஆங்கிலத்திலும், அணியும் உடைகளிலும், பெயருக்கு பின்னால் நீண்டிருக்கும் பட்டப் படிப்பிலும் காண்கிறோமே ஒழிய, மனத்தை செம்மை செய்யும் வழிமுறைகளை கற்று நாம் நாகரீகம் என்ற நிலையை அடைந்திருக்கிறோமா என்றால், அதன் பதில் உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எப்போது எவ்வித ச்ட்டங்களையும், நெறிமுறைகளையும் மனதிற் கொண்டு செயல் படாமல், நாமாகவே, நம் செம்மை மனதுடன், ஒரு காரியத்தை செய்கிறோமோ, அப்போது தான் நாம் நாகரீகமானவர்கள் என்ற சொல்லையே பயன்படுத்த முடியும்.

சரி தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம்.

கற்பு என்பது கூட ஒரு சிறந்த நெறிமுறையாக சொல்லப்பட்டது தான். ஆனால் அந்தோ! அது பெண்மைக்கு மட்டுமே உரித்தாக்கப் பட்டுவிட்டது.கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டதா,அல்லது உடல் சம்பந்தப்பட்டதா?அது எது சம்பந்தமாக வழிமொழியப்பட்டதோ தெரியவில்லை.ஆனால், நம் தமிழ் படங்கள் மூலம், கற்பு என்பது, உடல் சம்பந்தபட்டது தான் என்ற் எதிர்மறை தீர்மானம் வரும் அளவுக்கு மீடியாவின் தாக்கம் இருந்திருக்கிறது. பாவம், அப்போது அதையெல்லாம் சாட மருத்துவர் இராம தாஸூக்கு நேரமில்லை போலும்.

தாலிக் கட்டித் திருமணம்- இவ்வாறு திருமணம் செய்யும் முறை நம் தமிழ் நெறிமுறைகளில் ஒளவை காலத்தில் இல்லை. அதன் பின், அந்நெறிமுறைகளை மாற்றியது யார். தாலி என்ற கட்டுப்பாடு வர வேண்டிய அவசியம் என்ன? அப்போது எங்கோ , யாராலோ தாலிக் கட்டும் சம்பிரதாயம் பிறக்கும் அளவுக்கு, இயல்புத் தன்மை மாறப்பட்டிருக்கிறது.மீறப்பட்டிருக்கிறது. ஒரு பானை பாலில், துளி விஷம் கலந்தது போல. தாலி என்ற ஒரு கயிற்றிற்க்கு கொடுக்கப்படும் மதிப்பு, அதை கட்டும் மணமகனுக்கும் இல்லை, கட்டிக் கொள்ளும் மணமகளிடமும் இல்லை. இருவருமே, மனதால் இணைக்கப் படவில்லை. சம்பிரதாயங்களால் இணைக்கப்படுகிறார்கள். பின் வரும் காலக் கட்டங்களில் தாலி என்பது வேலியாகவே ஆக்கப்பட்டுவிட்டது. அது ஒரு பாதுகாப்பு அரண், கணவனிடத்திலிருந்து மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வாழாமல் காக்கும் அரண். ஏனெனில், நம்பிக்கையால் இணையவில்லையே அந்த இரு மனங்களும். கணவனுக்கு, மனைவி வேறு யாரிடமும் போய்விடாமல் காக்கும் கயிறு. மனைவிக்கோ தனது கணவன், வேறு துணை நாடும் போது, தன் கணவனே அவன் என்று சாட்சி சொல்லும் ஒரு கயிறு.

அடடா எத்தகைய உறவுமுறையை நம் நெறிமுறைகள் வகுத்துள்ளது. ஒருவரின் மேல் மற்ரொருவருக்கு நம்பிக்கை இல்லை..ஆனாலும் காலா காலத்திற்க்கு ஒருவரும் இணைபிரியாமல், தாலிக் கயிற்றின் சாட்சியோடு வாழ வேண்டும். என்னே நம் பண்பாடு.

தாலி என்ற ஒன்று இல்லாமல் இருந்தபோது, எத்தகையா நிலை நிலவியதோ, அதே நிலை தான் இப்போது இந்த (living together)சேர்ந்து வாழ்தலிலும்.

இருவர் தீர்மானிக்கின்றனர் அவரவர் வாழ்வை. எந்த நெறிமுறைகளும் அங்கு பார்க்கப்படுவதிலலை. இரு மனங்களின் சங்கமம், அதனால் ஏற்ப்பட்ட முடிவு. பாதுகாப்பு தேடப்ப்படுவதில்லை, மாறாக, அங்கு பாதுகாப்பு உணரப்படுகிறது. அங்கீகாரம் தேடப்ப்டுவதில்லை அங்கே அன்பு மட்டுமே உணரப்படுகிறது. இரு மனச்சங்கமத்தில், பாதுகாப்பு தேடப்படுவதென்பது எத்துணை கொடூரமான ஒன்று. எப்போது சுதந்திரம் உணரப்படுகிறதோ, அங்கு சங்கிலிக்கு தேவை என்ன. இத்தகைய வாழ்வில் எங்கு நெறிமுறைக்கு இடம்.

ஜீரணித்துக் கொள்ள முடியாது தான், எதார்த்தத்தை புரிந்து கொண்டாலே, பல கேள்விகளுக்கு நம்முள் விடை கொட்டிக்கிடக்கும். ஆனால் எதார்த்தம் தென்படாதவாறு நாம் இத்துணை காலம் கண் கட்டி இருந்திருக்கிறோமே. சிறிது கால்ம் பிடிக்கும் தான், அதிலிருந்து தெளிய. காலம் கனியட்டும், மூன்றாவது கண் திறக்கட்டும்.

43 comments:

Anonymous said...

Periya post Sowmya. Will come back and comment ok. Konjam busy today:))

Anonymous said...

living together athigamaana ethirkaala santhathikal than athikam paathikka paduvaarkal sath...kuzhanthai pethukalanna ok no problem...kuzhanthaiyum pethukittu appuram ivankalukku pidikalanna pirinjiruvaanga...appuram anthe kuzhanthaikal nilamai...enga sugam than mukkiyam nu poka arembicha...anbu paasam ethume illama poidum...geetha

Kumar said...

சற்றுக் கூர்ந்து பார்த்தால் 'மூன்றாவது கண்' திறப்பதற்கான அறிகுறிகள் நிறையவே தெரிகின்றன.

பழைய சமுதாய அமைப்பு, பழைய சடங்குகள்.
புதிய சமுதாய அமைப்புகள், புதிய தேவைகள், புதிய சலுகைகள், தேவைக்கேற்ற அளவு மட்டும் சடங்குகள் - இந்தச் சலுகைகள்/நெறி முறைகள் யாரும் யாருக்காகவும் தரவில்லை. தேவைப்பட்டவர்கள் அவரவர்களாகவே வேண்டிய மட்டும் எடுத்துக் கொண்டு விடுவர்.

"இருவர் தீர்மானிக்கின்றனர் அவரவர் வாழ்வை. எந்த நெறிமுறைகளும் அங்கு பார்க்கப்படுவதிலலை. இரு மனங்களின் சங்கமம், அதனால் ஏற்ப்பட்ட முடிவு. பாதுகாப்பு தேடப்ப்படுவதில்லை, மாறாக, அங்கு பாதுகாப்பு உணரப்படுகிறது"

உங்களின் இந்த வரிகளைப் படிக்கும் போது பாலகுமாரனின் 'இரும்புக் குதிரைகள்' சட்டென நினைவுக்கு வருகிறது.

இரண்டு ஜோடிகள்; ஒன்று-காயத்ரி, விஸ்வநாதன்; மற்றொன்று -பெயர்கள் நினைவில்லை-கௌசல்யா என நினைக்கிறேன். கூட ஒரு லாரி க்ளீனர் பையன்.

காயத்ரி விஸ்வநாதனிடம் விடுக்கும் வேண்டு கோள்-குழந்தை வேண்டுமென்று. பிரச்சினை என்னவென்றால் விஸ்வநாதன் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தை.

அதைவிட அழகாக எழுதப்பட்டது அந்த லாரி க்ளீனர் பையனும் அந்தப் பென்னும் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பிப்பது. லாரி வாங்க காசு போதவில்லையென அந்தப் பென் ' இன்னிக்கி ராத்திரி என்னை விட்டு விடு, நாளையிலிருந்து பத்தினியாயிருந்துட்டுப் போறேன்' என்று தன் பழைய தொழிலுக்கே மீண்டும் போய் அடுத்த நாள் காலையில் நிறைய சோர்வுடனும், நிறைய நோட்டுகளுடனும் வந்து சேர்கிறாள்.

தெரிந்த நல்லவர்கள் வாழ்த்த இந்த ஜோடி மிக ஜோராக லாரியின் முதல் சர்வீஸ் தொடங்குகிறார்கள். லாரியில் முன் சீட்டில் அந்தப் பென், பக்கத்தில் பெருமையுடன் ஸ்டியரிங் பிடித்த அந்த 'முதலாளி' பையன்.

நெற்றியிலடிக்கும் யதார்த்தம்.

அவரவற்க்குத் தேவையான வரம்புகள்!
பிறர் சொல்லி ஏற்கும் வரம்புகள் மீறப் படுகின்றன.
தனக்கெனத் தேர்ந்தெடுத்த வரம்புகள் புனிதமாய்ப் போற்றிக் காக்கப் படுகின்றன.

KRTY said...

ரொம்ப தாங்க்ஸ் செளம்யா.
சாட்ல புடிக்கிறேன், உங்களை.. !

Sowmya said...

haha..keerthi ok oru pudi pudinga :)

Sowmya said...

குமார்,

பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்..அதன் கதாபாத்திரத்தோடு ஒன்றாகிப் போகும்அளவு, இத்துணை நாட்கள், கதாப்பாத்திரத்தின் பெயர்களைக் கூட மறக்காமல், உங்களால் சொல்ல முடிகிறது என்றால்,அது கதையின் வீச்சும், அதன் கருத்தாழமும்,அத்தகைய ஆழத்தை உங்களால் சரியாக அடைய முடிந்ததும் தான் காரணம். எதார்த்தத்தை துல்லியமாக காணக்கூடியது கூட ஒரு வித கலையே.சிலருக்கு எதார்த்தம், புரியும்.ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாது. சிலர் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பர், ஆனால் துல்லியமாக உணர இயலாது. திறந்த மனதில்லாமல், முடிவு செய்யப்பட்ட எண்ணங்களை தேக்கிக் கொண்டால் ,ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல், அல்லது ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் அமையப் பெறாது.

உங்களை இங்கு சந்தித்ததில் உவகை அடைகிறேன். கருத்துப் பகிர்தலுக்கு என் நன்றிகள் :)

Sowmya said...

கீதா, வருகைக்கு நன்றி :)

கட்டுபாடு செய்தோ, இல்லை பிடிக்காத போலி வாழ்க்கை வாழ்ந்தோ, நீங்க சொல்ற அந்த அன்பும் , பாசமும், தூய்மையாகக் கிடைக்கும் அந்த குழந்தைகளுக்கு அப்படின்னு நினைக்கறீங்களா கீதா. நம் சமுதாயத்தைப் பொறுத்தவரை, உறவுகளுக்கு கொடுக்ப்படும் மதிப்பு, உணர்வுகளுக்கு துளியும் இல்லை. நாமாக நினைத்து கொள்கிறோம், நாம் உணர்வுகளை புரிந்து கொண்டு தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று. சொல்லப் போனால், தூய்மையான அன்பினால் எழுப்பப்படும் உறவு முறைகள் அரிதே. ஆனால் , அது அப்படி சாத்தியமே இல்லை என்று தான் மனம் கொக்கலிக்கிறது. தாலி கட்டி, இது என் சொந்த பொருள் என்ற ஆசையினால் அங்கு உறவு நிகழ்கிறதே ஒழிய, பூரண அன்பினால் அல்ல. நமக்கு அன்பிற்கும், ஆசைக்குமே வித்தியாசம் தெரிவதில்லையே. இரண்டும் ஒன்று தான் என்ற நிலையில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணம் ஓடிக் கொண்டிருக்கிறது.

நாம் நம், பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, நாமும், நம்மை சார்ந்த மற்ற உறவுகளையும் அமைத்துக் கொள்கிறோம். அதில் முழுக்க முழுக்க நம் வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கிறதே தவிர, நம்மால், பூரண அன்பு மட்டும் செய்து, உறவு முறைகளை அமைத்துக் கொள்ளும் தன்மை இல்லாமலே போய் விட்டது. அத்தன்மை உணரப்படாததாலேயே, நம்மால், இவ்விதமான சேர்ந்து வாழ்தல் வழியை ஒத்துக் கொள்ள இயலாமல் போகிறது.

கருத்துப் பகிர்தலுக்கு என் நன்றிகள் :)

Sowmya said...

priya,

Take your own time. Awaiting to see your comments :)

Sowmya said...

வவ்வால்,

சேர்ந்து வாழ்தல் என்றால் என்ன என்ற விளக்கமளித்து பதிவை ஆரம்பித்திருக்க வேண்டும் என்பது தோன்றாமலேயே போய் விட்டது. சொல்ல வந்த விஷயத்தின் ஆர்வத்தால், நேராக அதற்கு சென்று விட்டேன். இன்னொன்று , பதிவை படித்தாவது பார்ப்போம் என்று முயல்வோர், கண்டிப்பாக, நிறைய தெரிந்து வைத்து தான் படிப்பார்கள் என்ற எண்ணமுமே காரணம்.

சேர்ந்து வாழ்தலை வலுக்கட்டாயமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போடப்பட்ட பதிவு அல்ல இது. அதை எவ்வாறு புரிந்து கொள்ள முயல வேண்டும். அத்த்கைய உறவு முறைகள் , நம் குடும்பத்திலேயே நடந்தால் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே இப்பதிவு பதிவு செய்யப்பட்டது.

இருவர் சேர்ந்து வாழும் உறவை அவர்களே தீர்மானிக்க முடியுமே அன்றி, ஊரில் என்ன நடக்கிறது, அதையே நான் என் உறவு முறையுஇலும் கடைப்பிடிப்பேன் என்பது குருடன் தடவிப் பார்க்கும் யானை போன்றது, இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்ற யூகம் தான் நடக்குமே தவிர, ஆத்மார்த்தமான உண்ர்தல் அங்கு நிகழ சாத்தியக் கூறுகள் இல்லை.

கருத்துப் பகிர்தலுக்கு என் நன்றிகள் :)

Unknown said...

"கற்பு என்பது கூட ஒரு சிறந்த நெறிமுறையாக சொல்லப்பட்டது தான். ஆனால் அந்தோ! அது பெண்மைக்கு மட்டுமே உரித்தாக்கப் பட்டுவிட்டது" என்று கூறியிருக்கிறீர்கள்.

வவ்வாலும் தன் கருத்தில், "கற்பு நெறி என்பது இருபாலருக்கும் பொதுவாகத்தான் இருந்து இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மை வேறு.

முதலில் கற்பு நெறி பற்றி கொஞ்சம் யோசிப்போம்.

மனிதர்கள் மற்ற விலங்குகளைப் போல் வாழ்ந்த கற்காலத்தில் கற்பு என்பது இல்லை. சுரண்டலோ, மற்ற பேதங்களோ இல்லை. தாய் வழிச்சமூகம் என்று கூறுவர் அக்காலத்தை. பிறந்த குழந்தைக்கு தாய் யாரென்று தெரியும். ஆனால் தந்தை யாரென்று தெரியாது. பெற்றவளுக்கே கூட தெரியாது. இயற்கை மற்றும் மற்ற விலங்குகளிலிருந்தும் காத்துக்கொள்ள கூட்டம் கூட்டமாய மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் தாய் என்ற பெண் கூட்ட தலைவியாக சிறிது அதிகாரம் படைத்தவளாக இருந்தாள். பின்பு ஆண் தன் உடல் வலிமையால் காட்டை அழித்து நிலத்தை சமன் செய்து உணவு உற்பத்தியில் ஈடுபட்டான். நிலம் என்பது சொத்து என்று ஆயிற்று. நிலவுடைமைச் சமுதாயம் தோன்றியது. இக்காலகட்டத்தில் தான் ‘கற்பு’ என்பது உறுவாக்கப்பட்டது.

எனக்குப் பிறகு என்னுடைய இந்த உழைப்பு, உழைப்பால் விளைந்த இந்த நிலம் யாருக்குப் போய்ச் சேரவேண்டும் ? என்ற கேள்வி ஆணிடம் தோன்றியது. தன் உடனடி சொந்தத்திற்கே போய்ச்சேரவேண்டும். தன்னுடைய வாரிசுக்கே போய்ச் சேரவேண்டும் என்று ஆண் கருதினான். வேறு எந்த ஆணின் தொடர்பும் இல்லாமல் தன் ஒருவனின் தொடர்பால் மட்டுமே பிறக்கும் குழந்தையே தன் வாரிசாக முடியும் எனக் கருதி பெண்ணை சிறை வைத்தான். சிறையை உடைத்தெரிந்துவிட்டால்….என்ன செய்வது ? சூழ்ச்சி செய்தார்கள். நீ கற்புக்கரசி…என்று புகழ்ந்து போதையேற்றினார்கள். நீ பெய் என்றால் மழையும் பெய்யும் என்று கவிதை எழுதி தள்ளினார்கள். கற்புக்கரசிகளுக்கு சிலை வைத்தார்கள்.

ஆண் ஒருவனுக்குரிய உடைமையாக அவனுடைய தனிஉடைமைக்குரிய ஆண்வாரிசு தன்னை அப்பழுக்கின்றி பெற்று பராமரிக்கின்ற பெண்ணின் செயலை ஒட்டி அவளுடைய இயல்புகள், பண்புகள், மதிப்பீடுகள், நடத்தைகள் உருவாக்கப்பட்டன. ஆக கற்பு என்பது பெண்ணுக்குரிய நெறியாக மட்டுமே தான் உருவாக்கப்பட்டது. இருபாலருக்கும் பொதுவாக எந்த காலத்திலும் கருதப்பட்டதில்லை.

வள்ளுவர் தன் குறளில் ‘பதிவிரதா தருமத்தை’ பற்றி மிகவும் காட்டமாக கூறுகிறார். ஆணுக்குரியது ‘வளம்’, பொருட்செல்வம். பெண்ணுக்குரியது ‘மாண்பு’, ‘மனைமாட்சி’. இந்த மாண்பும் மனைமாட்சியும் பெண்ணின் பாலியல் ஒழுக்கத்திலுள்ள ‘கற்பு’ என்ற திண்மையால் ஏற்படுகின்றன. பெண் தனது பாலியல் ஒழுக்கத்தைச் செம்மையாகக் காக்க வேண்டும். பிறர் தரும் காவலை விட அவளாகவே செய்து கொள்ளும் காவலே வலிமையானது. பெண்ணுக்கு மாண்பு, மாட்சிமை எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அவள் தனது பாலியல் நடத்தையைக் காவல் புரிகிறபோது ஏற்படுகின்றன. காவலுக்குட்பட்ட இந்த பாலியல் நிலையை ‘நிறை’ என்கிறார் வள்ளுவர். இந்த நிறை ஏற்படுவதற்குப் பெண் வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது. சென்றால் பிற ஆண்களால் ‘நிறை’ குறைய வாய்ப்புகள் தோன்றுகின்றன. வீட்டுக்குள்ளேயே இருப்பதுதான் அவளுக்கு மாட்சி. வீட்டிலிருந்து கொண்டு அவளுக்கு உரிய, அறிந்த தெரிந்த ஓரே ஆண்மகனாகிய அவள் கணவனை அவள் தெய்வமாகத் தொழுது வணங்குவது பத்தினிக்குரிய அற நடத்தை.

ஒரு மனைவி தன்னுடைய கணவனை மனிதனாகப் பாவித்தால் ஒருவேளை அவனைத் தனக்கு ஒப்பானவனாக ஏகதேசமாக நினைத்துவிடக் கூடும் என்பதாலோ என்னவோ வள்ளுவர், கணவனை தெய்வமாக கருதி வழிபடச் சொல்கிறார். இவ்வாறு தெய்வமாக வழிபடுவதன் பலனாக அந்தக் கணவன் தெய்வத்திடமிருந்து அவளுக்கு இயற்கை இகந்த சக்தி வரமாக வழங்கப்படுகிறது. அந்தச் சக்தியால் அவளும் மாதம் ஒரு மழையைப் பெய்விக்கக் கூடிய தெய்வமாகிறாள்.

“தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

‘சேர்ந்து வாழ்தல்’ குறித்து பிறகு சொல்கிறேன்.

மூர்த்தி

Sowmya said...

வவ்வால் அவர்களே, தங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி.


"இருவர் தீர்மானிக்கின்றனர் அவரவர் வாழ்வை. எந்த நெறிமுறைகளும் அங்கு பார்க்கப்படுவதிலலை. இரு மனங்களின் சங்கமம், அதனால் ஏற்ப்பட்ட முடிவு. பாதுகாப்பு தேடப்ப்படுவதில்லை, மாறாக, அங்கு பாதுகாப்பு உணரப்படுகிறது. அங்கீகாரம் தேடப்ப்டுவதில்லை அங்கே அன்பு மட்டுமே உணரப்படுகிறது. இரு மனச்சங்கமத்தில், பாதுகாப்பு தேடப்படுவதென்பது எத்துணை கொடூரமான ஒன்று. எப்போது சுதந்திரம் உணரப்படுகிறதோ, அங்கு சங்கிலிக்கு தேவை என்ன. இத்தகைய வாழ்வில் எங்கு நெறிமுறைக்கு இடம்."

இதனோடு கூட..

" ஆகவே சேர்ந்து வாழ்தல் என்பதை நான் ஆதரிக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் "

- என்பதை இணைக்காததால், பதிவு புரியவில்லை போலும்.

சேர்ந்து வாழ்தலை ஆதரித்தே இப்பதிவினை சமர்ப்பித்தேன் என்பதை இப்போது தெளிவாக கூறிக் கொள்கிறேன்.

"\\இப்படி சொல்வதன் மூலம் நல்ல புரிதல் ஏற்பட்டு சேர்ந்து வாழுதல் செய்யலாம் என சொல்கிறீர்களா?"//

பாதுகாப்பை மட்டுமே முதற்கண்ணாக கொண்டு பார்க்கும் போது, உறவில் அன்பானது பின்னுக்கு தள்ளப்படுகிறது. ஆகவே எதற்கு முக்கியத்துவம் அதிகம் தரவேண்டும் என்ற வகையில் தான் என் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன்.( அதாவது, அன்புக்கு முன்னுரிமை தாருங்கள், அப்போது தான் சேர்ந்து வாழ்தல் சாத்தியமாக்கப்படும், சேர்ந்து வாழ்தலை ஆதரிக்கவும் முடியும்.)


"\\ஆண்களுக்கு மெட்டி அணியும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன் அதுவும் இது போல் ஆண்களுக்கென சுய ஒழுக்கம் நிர்ணயிக்க தான்!
"\\

மெட்டி அணியும் முறையில் சுய ஒழுக்கம் எங்கிருந்து வந்தது. அது என்ன ஆண்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியதா? இவன் கல்யாணம் ஆனவன் என்பதை ஊருக்கு பறை சாற்றவே மெட்டி அணிவது புழக்கத்தில் இருந்தத்தே தவிர, அது ஆணுக்கு இட்ட ஒழுக்கக் கட்டுப்பாடாக கொள்ள முடியாது.

Unknown said...

வவ்வால் அவர்களுக்கு,

‘பிறன் மனை நோக்கா பேராண்மையை’ ஆணுக்கு வள்ளுவர் வலியுருத்திச் சொன்தில் இருந்து நடைமுறையில் ஆண்கள் அப்படி இல்லை என்பது தெளிவாகிறது.

“ராமனைப் பற்றி இதிகாசம் எழுதுவார்களா?”

இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்பது ராமனின் இலட்சிய நிலை. இது ஏட்டளவில் இதிகாசமாகத் தான் இருந்ததே ஒழிய நடைமுறையில் இல்லை. ஒருத்திக்கு ஒருவன் என்பது நடைமுறை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது நடைமுறையில் கட்டாயப்படுத்தப்படவில்லை. பெண், ஒருவனோடு மட்டுமே பாலியல் வாழ்வு நடத்தி அவனுக்குக் களிப்பூட்டி, அவனைச் சார்ந்து வயிறு வளர்க்க வேண்டும் என்று கடுமையாக நிர்ப்பந்திக்கப்பட்டு இந்தச் செயற்கை நிலைமைக்குப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறாள். இந்த ஏற்பாட்டை பெண் எங்கே மீறிவிடுவாளோ? என்று ஆண் சதாகாலமும் பயந்து கொண்டிருக்கிறான். இந்த பயத்தின் வெளிப்பாடு தான் குஷ்பு சொன்ன கருத்துக் எதிராக நடந்த நிகழ்வுகள்.

மூர்த்தி

Sree's Views said...

Hello dear Sowmya..
This kosten has been in my mind for a long time and I have read lots of articles about it.
I strongly and sincerely feel 'living together' is the only arrangement that is based on love and an eagerness to live with a person whom one chooses. The rest are all only bcos it has fallen into a routine and an alternate arrangement is scary and is filled with insecurities.
But I have heard a lot of arguments opposing my views and many feel legally wedded state is necessary for the couple.
I read an article that pointed out some reasons why this arrangement does'nt work analysing the expectations of the cpl.(It was more than a yr ago and I am not sure which site)...but I will google it and get it when I find time.
The main aspect it pointed was that when cpls court...they are at their best behavior and they dont share much except good times. But when they start living together they are faced with a different side to the partner and it wld be a rude shock and an early wakening.
A partner expects the same courtship and attendance that was showered upon each other , before they started living together.
The gist of it is the irreplaceable concept of 'open mindedness' is absent. Each partner comes with a set of expectations and a preconcieved frame of mind. And this leads to a fatal nose dive for the relationship.
But ,if the partners are able to take the risk and are mature enough to call it off and be cool that wld be a boon. But that hardly happens..whether it is legal or an arrangement , emotions are involved and that takes its toll.
As for kids in this relationship...not much of a difference. Children suffer when the relationship goes sour , it does'nt matter if it is legal or an arrangement.
"Thaali" , "metti" etc are all outdated matters. Not one of my married friends or cousins wear thaali. My 10 year old niece is in love with 'elastic mettis' .
As for 'karpu' part , I feel as far as one is commited to another , he/she shd be loyal . If their preference changes then the right atittude shd be to sever one before embarking on the other...two timing or lying is def a 'no no' .
I absolutely agree with u that true love exists between two ppl who have chosen to live with each other without any external compulsion or approval.

Good post , Soms !

Hey Sowmya..I am expecting a proper response...chumma courtesy 'thanks for ur comments' vendaam :)

Sowmya said...

hey sree, l....ong time..Welcome :)

Most of the trouble comes when the relationship is formed before feeling the deeper love on both the sides. We have love, but its not very deeper. We have understanding, but we don’t have acceptance. These are the main causes for the failure in any relationship.

In most of the cases, both the partners are not having the same ratio of love. Every one’s views , belief, principles differ from each other. So the alignment of forming relationship get oscillated at times. Whether the relationship is formed under the marriage arrangement or living together arrangement, people are not firm with their mentality to form the relationship. And of course , people get connected through the marriage, first look for the security than other values. So no matter, they will be happy and satisfied, until he/she feel the security in the relationship.

I am not saying, living together arrangement is the alternative for the marriage system. People can choose according to their belief and convenience. Its just a two soul’s understanding and acceptance, wish and liking to get into the relationship with each other. People who give much priority for the security in their relationship, can able to join hands only with the marriage arrangement. People who mutually feel the love and gives priority to the feelings, they can fit for this living together arrangement.

As you said, people who joined hands through living together, faces the problem at an end , would have missed the priority what I have mentioned above. Finally, we can see the differences in both the arrangements. People are not ready to accept the facts , if their relationship with the marriage system comes to an end. Because , they formed their relationship with lots of expectations over security. People who joined each other with living together arrangement are also comes to an melancholy , because they dint form the relationship with deeper love and acceptance.

Sree, eppo question keteenga nan vilaavaariya reply panama poga. Eppavum, you agree with me na. :)

This time, NO thanks for yr comments :P

Sree's Views said...

Hey Soms...
Romba ensssooii panni padichen unga reply :) azhaga solli irukeenga..naanum innum articles padichen..somehow they are not satisfactory...if I come across something interesting on the topic will let u know.

Sree, eppo question keteenga nan vilaavaariya reply panama poga. Eppavum, you agree with me na. :)//
yes :)
Chumma seendi paakanumnu thonichi :)) adhaaaaan :P

This time, NO thanks for yr comments :P //
oh...I am so happy :)

Sowmya said...

Dear Sree,

You are most welcome gal..!!

I know, you have broad view and
outspoken attitude. I love that :)

Sowmya said...

hello voval,

sollikira concept ennanu purinchukama neengala ethavathu karpanai panni pesina yarum athukku poruppalla

Sree's Views said...

Hey Sowmya..
U have been tagged :)
enga blog pakkam oru murai vaanga !
4aavadhu rulennu onnu irukku , solliten , aama :))
see yaa !
with love...sree



hello Vavaal ,
why are u analysing where I come from ?
If u want to know anything about me , u just have to ask.
If u do not agree with my views , just kosten the opinion.
Lets avoid personal jibes here !

ஆனந்த் நிருப் said...

sowmya

தலைப்புகள் ஈர்க்கின்றன ( கருத்துக்கள்) , இன்னும் சற்றே தைரியமாகவும் வெளிப்படையாகவும் எழுதவும்

Ashok said...

Amazing Write Up ! More than the concept of "living together", the way you addressed how the mentality of the people has been tuned by the system is honest and true to every word. Independence and thoughts gets suppressed and crucified if it deviates from the system. As you finely said, if some one follows a traffic rules and etiquette it is only because of the fear of getting caught. What I get from this write up more than "living together" is having a thought and stand up for it, do the right thing even if it is going to lead you to your own indiction and punishment and like the movie "The Shawshank Redemption" says from bible(I guess) -"Salvation Lies Within". I second everything you said and great to see a write up like this to induce lots of nice discussion.

Anonymous said...

Family is a thread of fabric and one among them is living together.

It is between two people who make a bond, a relationship either to last forever or understand each other well. It is not just lust or desire which makes people to decide. Well, I shud also say if ther are people who take advantage, they are not fit for this society.

Marriage is basically a piece of paper or legalized form that you announce the society you are man and wife. Why can't this be respected for people who like to live together?

If you look at nomadic life those days, they never had rules or regulations to follow. It was either their own belief or trust to each other. The base theory of social contract was very much brought from the western world towards marriage.

Since many have pointed out pretty well, I am limiting here.

Waiting for ur tag girl??

Sree's Views said...

Sowmya...
I admire ur actions :)
yeah ! things were getting out of hand !

Sowmya said...

hi anand,

"Ignorance is bold and knowledge reserved. " :P

haha..

Sowmya said...

hi ashok,

Welcome to my blog. Very happy to receive comments from a person who has understood what i really conveyed. thank u so much :)

Sowmya said...

hey priya,

Thank you so much.It is really nice to see people with lots and lots of patience and interst to write elaborate comments . You know, its the right way of sharing stuffs.I am glad that I have many to talk their opinion through this comment section. I love to read these comments than the post :)

Sowmya said...

hoi sree,

enna ippadi maati vittuteenga.

nethu poora yosichum ennaku ennoda 8 facts ezhutha theriala pa. intha thadava excuse kuduthidungalen please :(

Sowmya said...

oops priyaa..

I didnt reply for this \\"Waiting for ur tag girl??"

Reply : :(

Anonymous said...

Sowmya: I tagged u for the blogger award girl. You forgot totally!!! You shud pick 5 ppl' from ur blog and write about them.

Well, we can see a cool and relaxed sowmya with this post:)

Anonymous said...

Actuala ennoda reply vida, I liked others comments better sowmya.

Sree's Views said...

sowmya...
enna soms..8 facts dhaaney?
naan edhuthu kodukaren..neenga continue pannunga..
1.A person with lot of convictions yet very subtle about it
2.enjoys people and interactions with them :)

mathadha neenga podunga :)

Sowmya said...

Sree...

Ithu niyayama....ippadilam eduthu kuduthathu,poda theriatha vishayatha pottu mathavangala kashta paduthanuma..

sree samathu ponnamm..

Sree vely vely good gal aam..

Sree sirichukitey " ok..venam" nu sonna kuchi mittai vangi tharuvenam...jo jo..jujuu.. :)

Sree's Views said...

Sree sirichukitey " ok..venam" nu sonna kuchi mittai vangi tharuvenam...jo jo..jujuu.. :) //

oook..venam :)
neenga ivalo sonnadhukku appuram naan adam pidipena :)

sari....chocobar enga ? :)

Sowmya said...

heya sree...

Thankooo so much.

tomorrow, you will have a choco bar rain at ur place. :)

Sowmya said...

hey priya,

Sorry.I am not able to entertain you people by any of my cool post. I find little difficult. and I also feel bad that I couldnt meet out your tag as well as sree's.

Ponnarasi Kothandaraman said...

Thats a very nice and thought provoking post :) Konjam perusa than ;)

Anonymous said...

Sowmya: Don't bother at all. All your post are worth reading. I was only kidding ok.

Donno worry...about the tag :)

Sowmya said...

hi ponnarasi,

Warm welcome :) Is that difficult to read?

Sowmya said...

hey priya

thank uuuuu :)

Anonymous said...

Sowmya, Is everything fine at ur end girl??

pria

Sowmya said...

itho vanthuten pria.

konjam enakkum, en vootukaararukkum ouudal. athan onnum oodala.

am back :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஔவை எப்ப வாழ்ந்தாங்க அப்ப தாலி இருந்துச்சான்னா எல்லாம் தெரியாது. ஆனால், 2000 ஆண்டுகள் முன்ன சங்க காலத்திலேயே தாலி அணியும் பழக்கம் இருந்தது என்று இராம. கி அவர்கள் 7 பாங்களாக இங்கு விரிவாக எழுதி உள்ளார்.

http://valavu.blogspot.com/2007/06/1.html

படிச்சுப் பாருங்க. ஆனா என்ன, இப்ப உள்ள மாதிரி கட்டுப்பாட்டை வலியுறுத்தும் ஒன்றாக தாலி அப்போது இருந்திருக்க வில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் எல்லா பிரச்சினையும் தாலியால் வருவதில்லை. தாலியைக் கழற்றி விட்டு வாழ்க்கை நடத்தினால் பிரச்சினை தீரும் என்பதற்கு உத்தரவாதமில்லை. நம் பிரச்சினைகளின், சமூகக் கட்டுப்பாடுகளின் ஒரு குறியீடு தாலி. அவ்வளவே. causeஐ ஒழிக்காமல் symbolஐ ஒழித்துப் பயனில்லை.

மற்றபடி, அன்பு அடிப்படை உறவுமுறை குறித்து நீங்கள் கூறியுள்ளது முழுக்க உடன்பாடே. நல்ல சிந்தனையைத் தூண்டும் இடுகை. நன்றி

Sowmya said...

இரவி,

தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இப்பதிவைப் பொறுத்தவரை, தாலி என்பது எதற்காக உண்டாக்கப் பட்டிருக்க வேண்டும். திருமண வாழ்வில் அதன் பங்கு என்ன என்பதை விவாதிக்கும் பொருட்டே, அது பற்றி கூற விழைந்தது.

தங்கள் இணைத்துள்ள வலைப்பதிவு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இணைப்புக்கு நன்றி. இப்பதிவு பற்றிய தங்கள் ஆர்வமும், ஒப்புதலும், நல்ல ஆரோக்ய சிந்தனையாளர்கள் அதிகமாகத் தான் இருக்கிறார்கள் என்பதை பறை சாற்றுவதாக உள்ளது. மகிழ்ச்சி. :)

Unknown said...

//ஒருவரின் மேல் மற்ரொருவருக்கு நம்பிக்கை இல்லை..ஆனாலும் காலா காலத்திற்க்கு ஒருவரும் இணைபிரியாமல், தாலிக் கயிற்றின் சாட்சியோடு வாழ வேண்டும். என்னே நம் பண்பாடு.//

//பாதுகாப்பு தேடப்ப்படுவதில்லை, மாறாக, அங்கு பாதுகாப்பு உணரப்படுகிறது.எப்போது சுதந்திரம் உணரப்படுகிறதோ, அங்கு சங்கிலிக்கு தேவை என்ன.//

//தாலி கட்டி, இது என் சொந்த பொருள் என்ற ஆசையினால் அங்கு உறவு நிகழ்கிறதே ஒழிய, பூரண அன்பினால் அல்ல. நமக்கு அன்பிற்கும், ஆசைக்குமே வித்தியாசம் தெரிவதில்லையே. இரண்டும் ஒன்று தான் என்ற நிலையில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணம் ஓடிக் கொண்டிருக்கிறது.//

//பாதுகாப்பை மட்டுமே முதற்கண்ணாக கொண்டு பார்க்கும் போது, உறவில் அன்பானது பின்னுக்கு தள்ளப்படுகிறது.//

//We have understanding, but we don’t have acceptance.//

//sree samathu ponnamm..

Sree vely vely good gal aam..

Sree sirichukitey " ok..venam" nu sonna kuchi mittai vangi tharuvenam...jo jo..jujuu.. :)//

Ellaathukkum serthu... :) :) :)